நிஜத்தைத் தேடி அலைந்தேன்,
உன் புன்னகை நிஜமென்றது!
நிழலைத் துரத்தி ஓடினேன்,
என் பயங்கள் நிழலென்றது!
கண்ணாடி முன்னே நின்றபோது பிம்பம்
நிஜமெனத் தோன்றி மறைந்தது;
உன் கண்களைப் பார்த்தபோது அங்கே
நிழலும் நிஜமாய் உறைந்தது!
புரியாத புதிர் இது...
கையில் இருக்கும் காதல் நிஜமா?
கலங்கி நிற்கும் கனவு நிழலா?
தெரிந்தும் தெரியாமலும் இந்த
மௌனப் போரில் தொலைகிறேன்;
நீ தொடும் வரை நிழலாய்,
நீ அணைக்கும் போது நிஜமாய்!
என்ற என் கவிதையுடன்
இரவு வணக்கம் 🙏🏼 #💝இதயத்தின் துடிப்பு நீ


