1996 தேர்தலில் பர்கூரில் தோற்கடிக்கப்பட்ட கிரிமினலால் , போய்ஸ் தோட்டத்தில் முக்குலத்தோரை முன்னிறுத்தி போடப்பட்ட திட்டத்தால் தென் மாவட்டங்கள் பற்றிக் கொண்டு எரிந்தன. கலைஞர் ஒரு குழு அமைத்து , தென் மாவட்டங்களில் வேலை வாய்ப்பு இல்லாதது தான் கலவரங்களுக்கு முதல் காரணம் எனக் கண்டறிந்து, முரசொலி மாறன் கொடுத்த அறிக்கையின் படி நாங்குநேரி தொழிற்பூங்கா உருவாக்கப்பட்டது
As usual அடுத்து வந்த கிரிமினல் ஆட்சி, அந்த நோக்கத்தை சிதைத்து தென் மாவட்டங்களின் தொழிற் வளர்ச்சிக்கு ஒன்றுமே செய்யவில்லை
இன்றைய முதல்வர் பொறுப்பேற்றுக் கொண்டதுடன், தூத்துக்குடி சிப்காட் டில் 1400 ஏக்கரில் Furniture க்காகவே ஒரு தொழிற்பேட்டை , வியட்நாமில் இருந்து அழைத்து வந்து வின்ஃபாஸ்ட் கார் தொழிற்சாலை மற்றும் காலணிக்கு முக்கியத்துவம் கொடுத்து தொடங்கப்பட்ட தொழிற்பேட்டை என தென் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிக்கல் நாட்டியுள்ளார்
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூ.30,000 கோடிக்கும் அதிகமான முதலீட்டில் உலகத்தரம் வாய்ந்த இரண்டு பெரிய கப்பல் கட்டும் தளங்கள் (Shipyards) அமைக்கப்பட உள்ளன. கொச்சின் மற்றும் மசகான் டாக் நிறுவனங்களுடன் இணைந்து அமைக்கப்படும் இந்தத் திட்டம், சுமார் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும். இது ஆசிய அளவில் முக்கிய வணிகக் கப்பல் கட்டுமான மையமாகத் தூத்துக்குடியை மாற்றும்
குறிப்பாக தூத்துக்குடி சிப்காட்டில் வின்ஃபாஸ்ட் கார் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டியது முதல் இயங்கத் தொடங்கிய காலத்திற்குள் , பிஹார் , உ.பி தொழிலாளிகளை அழைக்காமல், தூத்துக்குடி சுற்றியுள்ள படித்த இளைஞர்களை தேடிப்பிடித்து அவர்களுக்குத் தேவையான பயிற்சி கொடுத்து பணியில் சேர்த்துள்ளார்கள்
1989 ல் இரண்டே ஆண்டுகளில் கலைக்கப்பட்ட கலைஞர் ஆட்சியில் தான் முதன் முதலாக சென்னை ஶ்ரீபெரும்புதூர் - இருங்காட்டுக்கோட்டை தொழிற்பூங்காவில் Saint Gobain கண்ணாடித் தொழிற்சாலையை துவங்கி வைத்தார் கலைஞர் உலகமயமாக்கலுக்கு முன்னரே. எனக்குத் தெரிந்து இது தான் முதல் அயல்நாட்டு நிறுவனம் தமிழ்நாடு மண்ணில் கால் வைத்தது .
நல்லா கவனிக்க வேண்டியது, ஆட்சி செய்யக்கூடிய வாய்ப்பு இரண்டு வருடங்களுக்கு மட்டுமே கிடைத்தது
அடுத்தடுத்த திமுக ஆட்சியில் தான் சென்னை ஆட்டோமொபைல் தலைநகரமாக ஆனது
முதல் ஆட்சிக்காலத்தில் கலைஞரால் அடிக்கல் நாட்டப்பட்டது தான் அப்பல்லோ மருத்துவமனை. 13 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்து தொடங்கி வைத்தது தான் மதுரை மீனாக்ஷி மிஷன் மருத்துவமனை. இன்று தமிழ்நாடு மெடிக்கல் தலைநகரமாக மாற்றியதிலும் திமுக அரசின் பங்குண்டு
தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் முதன்மையாக இருப்பதன் முக்கிய காரணம் அதிர்ஷ்டம் அல்ல.
சென்னை சிறுசேரி , ஶ்ரீபெரும்புதூர், ஓசூர் , ராணிப்பேட்டை முதல் கப்பலூர் நாங்குநேரி என தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உருவாக்கப்பட்ட சிப்காட் , OMR சாலையில் தொடங்கப்பட்ட டைடல் பார்க், டைசல் பார்க், எல்காட் எல்லாமே கலைஞரின் தொலைநோக்குப் பார்வையில் உதித்த திட்டங்கள். திமுக ஆட்சியில் துவங்கப்பட்ட திட்டங்கள்.
திமுக ஆட்சியினால் மட்டுமே தமிழத்தின் தொழில் துறை முன்னணியில் இருக்கிறது
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
நன்றி அ. வெற்றிவேல் சகோ
Rajkumar Microbe
#தமிழ்நாடு_போராடும் #தமிழ்நாடு_வெல்லட்டும் #தமிழ்நாடு_வெல்லும் #வெல்வோம்_ஒன்றாக #ஸ்டாலின்_தொடரட்டும் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் #சங்கிகள்_வீட்டிற்கும்_நாட்டிற்கும்_கேடு #தமிழ்நாடு_வெல்லட்டும்_ஸ்டாலின்_தொடரட்டும் #இல்லத்தரசிகளுக்கு_எட்டாயிரம் #தற்குறி_தவக்கலையானஸ் #Fair_Delimitation #DETROIT_OF_INDIA #மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அன்பு அண்ணன் தளபதி அவர்கள் #அன்பு அண்ணன் திரு.ப.மாணிக்கம்தாகூர் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற கொறடா


