MUTHUPANDIAN RAMKUMAR
687 views 2 days ago AI indicator
#அமாவாசை #தை அமாவாசை #அமாவாசை vrp #ஆடி அமாவாசை Vrp 🔔 #🌹இனிய வெள்ளிகிழமை காலை வணக்கம்🌹 ஆடி அமாவாசை! பித்ரு தோஷம் முதல் தர்ப்பணம் வரை - கண்ணுக்குத் தெரியாத தோஷங்களையும் நீக்கும் ஆடி அமாவாசை வழிபாடு! 2026 ஆம் ஆண்டு ஆடி அமாவாசை ஆகஸ்ட் 12, புதன்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினம் காலை சூரிய உதயத்திற்குப் பிறகு தொடங்கி மதியம் 12:00 மணிக்குள் (குறிப்பாக பிரம்ம முகூர்த்தம், காலை மற்றும் உச்சி காலம் எனப்படும் மதிய வேளைக்குள்) முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுப்பது மிகவும் சிறப்பான மற்றும் உகந்த நேரமாகும்.. தவிர்க்க வேண்டிய நேரம்: எமகண்டம் மற்றும் ராகு காலம் போன்ற அசுப நேரங்களைத் தவிர்த்துவிட்டு அதற்குள் வழிபாட்டை முடிக்க வேண்டும். தடுமாறியவனுக்கு தை அமாவாசை, ஆட்டம் கண்டவனுக்கு ஆடி அமாவாசை மறந்துவிட்டவனுக்கு மஹாளய அமாவாசை’ என்றொரு சொல்வழக்கே உண்டு. ஆக, இந்தப் புண்ணிய தினங்களிலாவது நம் முன்னோர்களை நினைத்து, அவர்களுக்கு உரிய ஆராதனையை உளமாரச் செய்வது அவசியம். சுபகாரியத் தடைகள், முன்னேற்றம் இன்மை, தொழில் வியாபார விருத்தியின்மை, குடும்பத்தில் அமைதியின்மை ஆகிய சிக்கல்களுக்குக் காரணம் பித்ரு தோஷமே என்கிறது ஜோதிட சாஸ்திரம். நமக்கு உயிரையும் உடலையும் தந்த பெற்றோர்களை அவர்கள் வாழும்போது உரிய மரியாதையோடு நடத்தி அவர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்ய வேண்டியது ஒவ்வொரு பிள்ளையின் கடமை. அவர்கள் மறைந்த பிறகு அவர்களுக்கு உரிய ஆராதனைகள் செய்து வழிபட வேண்டியதும் அவசியம். இவற்றைச் செய்யாமல் விட்டுவிடும்போது முன்னோர்களின் வருத்தத்துக்கு ஆளாவோம். அவர்களின் மனக்குறையே பித்ரு தோஷமாக நம்மைப் பீடிக்கும். ஒருவரின் ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன், ராகு - கேதுக்களோடு எந்த ஸ்தானத்தில் சேர்ந்திருந்தாலும் அது பித்ரு தோஷத்தைக் குறிக்கும். இப்படிப்பட்ட ஜாதகக்காரர்கள் பித்ரு வழிபாட்டை மிகுந்த கவனத்துடன் செய்துவருவது அவசியம். அவர்கள் மட்டுமல்ல தந்தையை இழந்த அனைவரும் அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்து வழிபாடு செய்வது அவசியம். ஓர் ஆண்டில் எத்தனை தர்ப்பணங்கள் செய்ய வேண்டும்? ஓர் ஆண்டுக்கு 96 முறை தர்ப்பணம் செய்ய வேண்டும் என்கிறது வேதம். ஆனால் இன்றைய அவசர யுகத்தில் அனைவராலும் இதைக் கடைப்பிடிக்க முடியாது. எனவே 12 மாதங்களிலும் வரும் 12 அமாவாசை நாள்களில் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்கிறார்கள் பெரியோர்கள். ஆனால் அதுவும் சாத்தியம் இல்லை என்பவர்கள் குறைந்த பட்சம் மூன்று அமாவாசைகளைத் தவறவிடக்கூடாது. ஆடி, புரட்டாசி தை ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை நாள்களிலாவது தர்ப்பணம் செய்து வழிபட்டால் பித்ரு தோஷம் ஏற்படாது என்கிறார்கள். தர்ப்பணம் சங்கல்பம் அமாவாசை நாளின் வாரம் (கிழமை), நட்சத்திரம் சொல்லி, கலசத்தில் உள்ள நீரில் கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய நதிகள் எல்லாம் எழுந்தருளும்படி வேண்டிக்கொள்ள வேண்டும். பிறகு தர்ப்பணத்துக்குரிய சங்கல்பம் செய்ய வேண்டும். மந்திரங்கள் தெரிந்தவர்கள் சங்கல்ப மந்திரங்களைச் சொல்லிச் செய்யலாம். தெரியாதவர்கள் கீழ்க்கண்ட வரிகளைச் சொல்லி சங்கல்பம் செய்யலாம். (ஆடி அமாவாசைக்கான சங்கல்பம்... தமிழில்) `ஓம்! பூமேவிடும் பரதகண்டம் மேருவின் தென்பால் தேவரும் விரும்பும் புண்ணிய நாட்டில் பொலிவுறு எந்தன் வீட்டில் பித்ருக்கள் தெய்வங்கள் எழுந்து ஆஷாட மாதத்து பூச விண்மின் நிலவும் நாளில் தர்ப்பணம் செய்வதை ஏற்க குறிக்கோள் பகர்ந்திட்டேன்' என்று கூறி சங்கல்பிக்க வேண்டும். பிறகு `தேவர்களே, பித்ருக்களே, மகரிஷிகளே தர்ப்பையில் அமர்ந்திடுக' என்று கூறி மும்முறை எள் இடவேண்டும். அடுத்து, `தேவர்களே உங்களுக்குத் தர்ப்பணம் விடுகிறேன் பிரம்மனே உமக்குத் தர்ப்பணம் விடுகிறேன் மகரிஷிகளே உங்களுக்குத் தர்ப்பணம் விடுகிறேன்' என்று கூறி மூன்று முறை விரல் நுனி வழியாக தர்ப்பணம் இட வேண்டும். பின்னர்... அப்பா - அப்பாவுக்கு அப்பா- அப்பாவின் தாத்தா ஆகியோரின் பெயரைச் சொல்லி, கோத்திரம் சொல்லி எள்ளும் நீரும் விட வேண்டும். அதேபோல் அம்மா வழிக்கும் தர்ப்பணம் இட வேண்டும். இதில் அம்மா, தந்தையின் அம்மா, தாத்தாவின் அம்மா ஆகியோரது பெயர்களைக் குறிப்பிட்டுத் தர்ப்பணம் இட வேண்டும். அடுத்து, ஆத்ம பிரதட்சணம் (வணங்கிய படியே தன்னைத்தானே சுற்றுவது) செய்ய வேண்டும். பின்னர், தர்ப்பையைப் பிரித்துவிட்டு, எள் - நீர் வைத்துக்கொண்டு... 'இந்தத் தர்ப்பணத்தின் மூலம் என் தாய் - தகப்பன், உறவினர்கள், கோத்திர வழி வந்த அனைவரும்... நான் விடும் எள் நீரால் பரம திருப்தியடைந்து என்னை ஆசீர்வதிக்கட்டும்' என்று மனதாரப் பிராத்தனை செய்துகொள்ள வேண்டும். ஆடி அமாவாசை நாளில் சூரிய உதயத்திற்கு பிறகு, சூரிய பகவானை சாட்சியாக வைத்தே முன்னோர் வழிபாடு மற்றும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். பிரம்ம முகூர்த்த வேளையில் அமாவாசை தர்ப்பணம் கொடுக்கக் கூடாது. ஆடி அமாவாசையில் சூரிய பகவானுக்கு கண்டிப்பாக நீர் படைத்து வழிபட வேண்டும். இது முன்னோர்களுக்கு நாம் செய்யும் மிக முக்கியமான வழிபாடு ஆகும். ஆடி அமாவாசை அன்று காலை 6 மணி முதல் 11.55 மணி வரையிலான நேரத்தில் தர்ப்பணம் கொடுத்து, முன்னோர்களை வழிபடலாம். பொதுவாகவே பகல் 12 மணிக்கு பிறகு தர்ப்பணம் கொடுக்கக் கூடாது என்பது நியதி. அதனால் அதற்கு முன்பாக முன்னோர் வழிபாட்டினை நிறைவு செய்வது சிறப்பானதாகும். வாய்ப்பு இருப்பவர்கள் கடல் சார்ந்த மற்றும் நதிகள் சார்ந்த இடங்களுக்கு சென்று புனித நீராடி தர்ப்பணம் கொடுக்கலாம். முடியாதவர்கள் குளக்கரைகளில் தர்ப்பணம் கொடுக்கலாம். இது எதற்கும் வாய்ப்பு இல்லாதவர்கள் வீட்டிலேயே, வலது கையில் எள் வைத்துக் கொண்டு, முன்னோர்களின் பெயர்களை சொல்லி, காசியை நினைத்துக் கொண்டு, கையில் வைத்திருக்கும் எள், கட்டை விரல் வழியாக வழிந்து ஓடும் படி, நீர் ஊற்றி முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் இரைத்து விட்டு, சூரியனை வழிபடலாம். அந்த தண்ணீரை கால் படாத இடத்தில் ஊற்றி விடலாம். 🙏
11 likes
7 shares

More like this