#🌎பொது அறிவு
தற்கால கேரளா திருவிதாங்கூர் சமஸ்தானத்தில்
வைக்கம் என்ற ஊரில் வைக்கம் சிவன் கோவிலைச்
சுற்றியுள்ள தெருக்களை தாழ்த்தப்பட்ட சமூகத்தினர்
பயன்படுத்தக்கூடாது என்ற தீண்டாமை சட்டத்திற்கு எதிராக
நடைபெற்றப் போராட்டமான “வைக்கம் போராட்டம்” ல்
பங்கேற்று பிரச்சாரங்கள் மேற்கொண்ட
தந்தை பெரியார்
கைது செய்யப்பட்டு அருவிக்குத்தி
சிறையில் அடைக்கப்பட்ட தினம் இன்று.
( *22 ஏப்ரல் 1924*)
சுமார் ஒருமாத சிறைத்தண்டனைக்குப்பிறகு விடுதலை செய்யப்பட்ட தந்தை பெரியார், விடுதலைக்குப்பின்னரும் போராட்டங்களில் ஈடுபட்டதால் மீண்டும் கைது செய்யப்பட்டு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு திருவனந்தபுரம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். சுமார் நான்குமாத தண்டனைக்குப்பின்னர் திருவிதாங்கூர் மகாராஜா காலமானதால் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டனர், அப்போது தந்தை பெரியாரும் விடுவிக்கப்பட்டார்.


