ShareChat
click to see wallet page
search
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு தூத்துக்குடி, மே.31- தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஜின்பேக்டரி ரோடு மாநகராட்சி பள்ளி உட்பட பல்வேறு பகுதிகளில் மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் ஆணையர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி எல்லா பள்ளிகளிலும் மாணவ மாணவிகளின் நலன்கருதி மாநகராட்சி பள்ளிகளின் நிர்வாகத்தின் கீழ் 8 தொடக்கப் பள்ளி 11 நடுநிலைப்பள்ளி,1 மேல்நிலைப்பள்ளி என 20 பள்ளி செயல்பட்டு வருகிறது. கோடை விடுமுறை முடிந்து வரும் 4 ஆம் தேதி வியாழக்கிழமை பள்ளி திறக்கப்படும் என தமிழக அரசின் பள்ளிகல்வித் துறை அறிவித்துள்ளது. அதன்படி எல்லா பள்ளிகளிலும் மாணவ மாணவிகளின் நலன்கருதி பள்ளிகளிலுள்ளநீர் தேக்க தொட்டி, கழிவறை, விளையாட்டு மைதானம் மற்றும் ஆங்கில வழி கல்வி அறைகள் உள்ளிட்ட வகைகளை முழுமையாக மேயர் ஆய்வு செய்தார். மேலும் பள்ளியில் தேவையற்ற பொருட்களை அகற்ற உத்தரவிட்டுள்ளோம் தற்போது மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை தேவையான அனைத்து கட்டமைப்புகளும் தற்போதைய காலத்திற்கேற்ப செய்து கொடுத்துள்ளோம். கடந்த ஆண்டு முதல் மாநகராட்சி பள்ளிகளிலும் சேரும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இரண்டு பொதுத்தேர்விலும் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர் அதே போல் திறனாய்வு தேர்வின் மூலம் தேர்ச்சி பெற்றவர்களை கெளரவைத்துள்ளோம். எதிர்கால தலைமுறையினரின் நலன்கருதி நல்ல பழக்க வழக்கங்களை சொல்லி கொடுத்து கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில் தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர், மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லா துறைகளையும் சிறப்பான முறையில் கண்காணித்து வழிநடத்தி சென்றது போல் எனக்கு கல்வியும் மருத்துவமும் இரண்டு கண்கள் என்று அரசு விழாக்களில் தெரிவிப்பார். கல்விக்கென்று கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து எழுத்தறிவு படிப்பறிவு இல்லாதவர்கள் தமிழகத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்குவதற்கு உழைப்பதை போல் நாங்களும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள மாணவ மாணவிகளின் நலன்கருதி எல்லா பணிகளுக்கும் துணையாக இருந்து செய்து கொடுக்கிறோம் எல்லா பள்ளிகளும் திறப்பதற்கு தயாராக உள்ளது மாநகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒத்துழைப்பது போல் நல்லமுறையில் செயல்படும் மாநகராட்சி பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்து பலனடைய வேண்டும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக தமிழ் ஆங்கில வழி கல்விகள் நல்லமுறையில் ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படுகிறது.இதை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். கனிமொழி எம்.பி. ஆலோசனை பேரில் 2021ஆம் ஆண்டு மாநகராட்சி பள்ளிகளில் 100 மாணவர்கள்தான் படித்து வந்தனர் ஆனால் தற்போது ஒவ்வொரு மாநகராட்சி பள்ளியிலும் 900 முதல் 1200 பேர் படித்து வருகின்றனர். இது முன்னாள் முதலமைச்சருக்கு கிடைத்த மிகப்பெரிய சாதனையாகும். சில பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகள் தயாராக இருக்கின்றன என தெரிவித்தார் ஆய்வின் நிகழ்வில் சுகாதார ஆய்வாளர் ஹரி கணேஷ், மாமன்ற உறுப்பின் மும்தாஜ், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, போல்பேட்டை பிரதிநிதி பிரபாகர் உட்பட பலர் உடனிருந்தனர்.
செய்திகள் - ( ( - ShareChat