ShareChat
click to see wallet page
search
கலைஞரும் கனவில் வந்த முருகனும்..!!! கலைஞர் கருணாநிதி அவர்கள் ‘கண்ணகி’ கதையை மீண்டும் எடுக்க விரும்பினார். எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி போன்றவர்கள் நடித்தார்கள். கே.பி.சுந்தராம்பாள் அம்மையாரை கவுந்தி அடிகள் வேடத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசை கொண்டார் கலைஞர். சுந்தராம்பாள் உடன்படவில்லை. “என் முருகக் கடவுளிடம் கேட்டுச் சொல்கிறேன்” என்று கூறினார். அதற்குக் கலைஞர், “முருகக் கடவுளிடம் இதுபற்றிப் பேசும்போது ஒரு தகவலை அவரிடம் சொல்லுங்கள். அவரை நடிக்கக் கூப்பிடுவது கருணாநிதி என்பதையும் சேர்த்துச் சொல்லுங்கள். அவர் ஒப்புதல் அளித்து விடுவார்” என்றார். ஆச்சர்யம் என்னவென்றால் மறுநாள், கலைஞர் கருணாநிதியை, சுந்தராம்பாள் சந்திக்கிறார். அவரது படத்தில் நடிக்கச் சம்மதிக்கிறார். அப்போது சுந்தராம்பாள் என்ன கூறினார் தெரியுமா.? “நேற்று இரவு சொப்பனத்தில் என்னிடம் முருகன் குரல் பேசியதாகத் தெரிந்தது. அந்தப் படத்தில் நடிப்பது தேசத்துக்கு நல்லது என்று அந்தக் குரல் கூறியதுபோல் உணர்ந்தேன். உங்கள் படத்தில் நடிக்கச் சம்மதிக்கிறேன்” என்று கூறினார்களாம். (தகவல் : முக்தா சீனிவாசன் எழுதிய இணையற்ற சாதனையாளர்கள் - பாகம் 1) #🤔தெரிந்து கொள்வோம்
🤔தெரிந்து கொள்வோம் - 1924 2018 1924 2018 - ShareChat