ShareChat
click to see wallet page
search
"முதல் போட்ட அமைச்சர்" ஒருவர் இருப்பதாகப் பேசி முதல்வர் விஜய்யை கேவலப்படுத்த நினைப்பது யார்? "ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை! ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை!" - கவிஞர் ஆலங்குடி சோமு யார் முதல் போட்டது? விஜய் என்ற தனி மனிதரின் மீது மக்கள் வைத்த நம்பிக்கைதான் அவரை முதல்வராக்கியது. யாரும் முதல் போட்டு அவரை முதல்வராக்கவில்லை; தவெகவை வைத்து இங்கு வியாபாரம் நடக்கவில்லை. * தவெக வேட்பாளர்கள் ஓட்டுக்குப் பணம் கொடுத்தார்களா? * பொதுக் கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் பிரியாணியும் சரக்கும் கொடுத்து லாரிகளில் ஆட்களைக் கூட்டிக்கொண்டு வந்தார்களா? * பூத் ஏஜெண்டுகளுக்கு பணப்பட்டுவாடா நடந்ததா? திராவிடக் கட்சிகளுடன் ஒப்பிடும்போது தவெக தேர்தலுக்காக செலவு செய்தது தூசு. அவர்களுக்கு கட்சியும் பணஉதவி செய்யவில்லை. அது பொய்ப்பிரச்சாரம் செய்பவர்களுக்கும் தெரியும், மக்களுக்கும் தெரியும். எல்லோரையும் தற்குறிகள் என்று நினைத்து யாரும் அறிவாளிகள் போலப் பேசவேண்டாம். "முதல் போட்ட அமைச்சர்" என்ற சொல்லாடல் விஷமத்தனமானது. * எந்தக் கட்சியில் யார் முதல் போட்டது என்பது ஊரறிந்த ரகசியம். * தேர்தல் களத்தில் பணநாயகம் தோற்றது. * MLAக்கள் மற்றும் அமைச்சர்கள் இளைஞர்கள், சாதாரண பின்புலம் கொண்டவர்கள். இதனால் இன்று இளைஞர்கள் விழிப்புணர்வுடன் அரசியலில் நம்பிக்கையுடன் பங்கேற்க முடிகிறது. துட்டுக்கு சீட்டு என்ற கலாச்சாரம் ஓய்ந்தது. இது விஜய்யின் வரலாற்றுச் சாதனை. அதை கொச்சைப் படுத்தி அற்ப சந்தோஷம் அடைய நினைப்பது சரியில்லை. எந்தக் கட்சியில் எண்ணற்ற அளவில் ஏராளமான பண மூட்டைகள் உள்ளன? அவை எப்படி வந்தன? இதெல்லாம் மக்களுக்குத் தெரியும். அவற்றை வைத்து இனி தேர்தலில் வெற்றிபெற முடியாது! மேற்கண்ட பொய்ப் பிரச்சாரத்தால் விஜய்க்கு எந்த நஷ்டமும் இல்லை. இதனால் அதை யார் இயக்கி நடத்துகிறார்களோ, அவர்களுக்குத்தான் நஷ்டம் என்பதை அடுத்த தேர்தலிலும் அடிபடும்போது புரியும்! #தவெக #விஜய் #ஜோசப்விஜய் Have you subscribed to our channel? If not, please subscribe now. This is your channel! #📺அரசியல் 360🔴 #🚹உளவியல் சிந்தனை
📺அரசியல் 360🔴 - ShareChat
00:05