#innraya SINTHANAY சிந்தனை*
🌷07.05.2026🌷
மிக எளிமையாக எந்தத் தத்துவ மேளமும் இல்லாமல்...
நாம் நல்லா இருக்க மற்றவர்களும் நல்லா இருக்க என்ன செய்யணும்?
சுவற்றில் எறிகின்ற பந்து மீண்டும் நம்மிடமே வருவது போலத்தான்,
நாம் பேசும் வார்த்தைகளும், நாம் செய்யும் செயல்களும் நமக்கே வரும் என்பது ஒரு பிரபஞ்ச ரகசியம்.
சுவர் பிரபஞ்சமாகவும், பந்து நமது வார்த்தைகள், மற்றும் செயல்களாவும் உள்ளதை , உணர்ந்து கொள்வோம்.
இப்ப, கவனிப்போம், "நல்லாயிருங்க"என நாம் ஒருவரை வாழ்த்தினால்,
அந்த வாழ்த்து யாருக்கு!! (சுவர்- பந்து நினைவில்) ஆமாம் நமக்குத் தான்.
நாம் ஒருத்தரை வாழ்த்தினால் சுவராகிய பிரபஞ்சம் நாம் வாழ்த்தின பந்தாகிய வாழ்த்தினை மீண்டும் நமக்கே தரும்.
அப்ப, நாம யாரையாவது நல்லா இருக்கக் கூடாதுன்னு சொன்னா(சுவர்+பந்து)
யாருங்க நல்லா இல்லாம போவாங்க ?
இங்க, நாம பேசுற ஒவ்வொரு வார்த்தைக்கும், செய்யிற ஒவ்வொரு செயலுக்கும் பதில் சொல்லித் தான் ஆகணும்.
எல்லாவற்றையும் யாருக்கும் தெரியாது என மறைக்க இயலாது.
எல்லாமாய் நிற்கும் இறைப் பேராற்றலாகிய பிரபஞ்சம் எல்லாவற்றையும் உணரும் என்பதை உணர்ந்து பேசுவோம், செயல்படுவோம்.
ஆதலால், இன்றிலிருந்து எளிமையாக ஒரு மன முடிச்சு சங்கல்பம் செய்து கொள்வோமா?
அடுத்தவருக்கு நலம் தரும், மகிழ்ச்சி தரும் இனிமையான சொற்களை மட்டுமே மனப்பூர்வமாக நாம் பேச வேண்டும்.
மற்றவரை சந்தோஷப்படுத்த, பாராட்ட, ஆறுதல் கூற, உற்சாகப்படுத்த, வாழ்க்கை அழகானது வாழ்ந்து பார்த்திரலாம் வான்னு அழைக்க, மனப்பூர்வமாக
நல்லவைகளை மட்டுமே பேசுவது என நமக்கு நாமே ஒரு முயற்சி செய்து பார்க்கலாமா ?
நல்லதை மட்டுமே நாம் பேசுவோம்" என ஒரு சின்ன முயற்சி இன்று முதல்.
முயற்சி+ பயிற்சி+ தேர்ச்சி + இனிய விளைவு.
வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


