#🌎பொது அறிவு
தி.மு.க.கட்சியின் முதல் பிளவாக
தி.மு.க. கட்சித்தலைவர்களில் ஒருவரான
E.V.K.சம்பத்
தி.மு.க.தலைவர் அறிஞர் அண்ணாவுடனான
திராவிடநாடு பிரிவினைக் கொள்கையைப்பற்றிய
கருத்து வேறுபாட்டால் தி.மு.க.விலிருந்து விலகி
“தமிழ்த் தேசியக் கட்சி”
என்ற கட்சியை துவக்கிய தினம் இன்று.
(19 ஏப்ரல் 1961)
தி.மு.க.தலைவர்களில் ஒருவரான M.P.சுப்ரமணியம், கவியரசு கண்ணதாசன், நடிகர்திலகம் சிவாஜிகணேசன், பழ.நெடுமாறன் உள்ளிட்ட சிலர் மற்றும் தொண்டர்களும் தமிழ்த் தேசியக் கட்சியில் இணைந்தனர்.
மேலும் தி.மு.க.கட்சியில் கலைஞர் மு.கருணாநிதிக்கு முக்கியத்துவம் கொடுத்ததும் இவருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது


