ShareChat
click to see wallet page
search
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 *விருதுநகா் மாவட்டம்* *கொள்ளை வழக்கில் ஈடுபட்ட 6 நபா்கள் உடனடியாக கைது* சிவகாசி கிழக்கு காவல் நிலைய சரகத்தில் நேற்று (19.05.26) மாலை 04.00 மணியளவில் 38 வயதுள்ள பெண் தன்னுடைய வீட்டில் தனது மூன்று தோழிகளுடன் இருந்த போது, பார்த்தால் அடையாளம் தெரியக்கூடிய சுமார் 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க 6 நபா்கள் அவரது வீட்டினுள் அத்துமீறி நழைந்து அவா்களில் ஒருவரை தாக்கியும், அவா்களை கத்தியை காட்டி மிரட்டியும், அவா்களிடமிருந்து ரூ.60,000/- மதிப்புள்ள தங்க தோடு, வெள்ளி கொழுசு மற்றும் இரண்டு கைபேசிகளை பறித்து சென்றதாக மேற்படி பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல்துறையினரின் துரிதமான நடவடிக்கையின் காரணமாகவும், சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளின் அடிப்படையிலும், வழக்கு பதிவு செய்யப்பட்ட 12 மணி நேரத்திற்குள், இவ்வழக்கில் தொடா்புடைய 6 எதிரிகளையும் கைது செய்து, வழக்கின் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
செய்திகள் - காவல் நிலையம் சிவகாசிகிழக்கு விருதுநகர் மாவட்ட காவல் நிலையம் சிவகாசிகிழக்கு விருதுநகர் மாவட்ட - ShareChat