#innraya SINTHANAY சிந்தனை.*.( 13.05.2026)..
……………………………………………............
*முயன்றால் முடியும்"..*
......................................
ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்ததோர் ஆற்றல் உண்டு. அதை வாழ்க்கையின் சரியான முன்னேற்றப்பாதையில் பயன்படுத்திப் பயணித்தால் அது நல்ல விளைவைத் தருகின்ற நிலைக்கு அம்மனிதனை கொண்டு போய் சேர்க்கும் என்பது நிதர்சனம்.
உங்களிடம் உள்ள ஆற்றலை நீங்கள் குறைத்து மதிப்பிட வேண்டாம். என்னால் இது முடியுமா? என்று எடுத்த எடுப்பிலேயே எதைக் கண்டும் அச்சப்படாதீர்கள்.
தோல்விக்கு அஞ்சி முடங்கிக் கிடப்பதோ, மடங்கிக் கிடப்பதோ நல்ல வாழ்க்கை ஆகாது.
போட்டியில் தோற்றாலும் ஓட்டப் பந்தயத்தில் ஓடுபவன் தான் வெளியில் நின்று விமர்சிப்பவனை விட மேலானவன்.
பல்வேறு உலகப் புகழ் பெற்ற அறிஞர் பெருமக்கள் எல்லாம் ஒவ்வொரு தோல்வியும் வெற்றியை நோக்கி தம்மை அழைத்துச் செல்லும் படிக்கட்டுக்கள் எனக் கருதி உழைத்தனர். இறுதியில் வெற்றி பெற்றனர்...
தாமஸ் ஆல்வா எடிசன் சந்தித்த தோல்விகள் ஏராளம்; அனால் அவர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞான மேதையானார்.
முயன்றால் முடியும், இடியையும் தாங்கலாம். முயன்றால் முடியும், இருள் நீக்கி விடியலையும் காணலாம்.
முயன்றால் முடியும், முடிவில் புகழை அள்ளலாம். முயன்றால் முடியும், விண்ணையும் தொடலாம்.
முயன்றால் முடியும், மண்ணில் பொன்னையும் பார்க்கலாம்.
முயன்றால் முடியும், கறை படியும் கரங்களும் சரித்திரம் படைக்கலாம்.
ஆனால் முயற்சி இல்லாதவர் வீழ்ச்சி அடைகிறார். முயற்சித்தவர் மகிழ்ச்சி கொள்கிறார்..
முயற்சியை மூச்சு போல் நினைப்பவர் வாழ்வில் வெற்றி பெறுகிறார்கள். முயற்சியை அலட்சியம் செய்பவர்கள் தோல்வியைத் தழுவுகிறார்கள் ..
திருவள்ளுவரும் இதைத் தானே சொல்கிறார்.
‘’முயற்சி திருவினை யாக்கும், முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்’’ என்று.
நமக்கு வெற்றிகள் வந்து சேர்வதற்கு என்று தனியாக ஒரு நேரம் எதுவும் இல்லை. விடாமுயற்சியோடு, முயன்று செயல்படுகின்றவர்களிடத்தில் எந்த நேரத்திலும் வெற்றிகள் வந்து சேரும்.
*ஆம்.,நண்பர்களே..,*
முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும். (ஆனால்)
முயலாமை வெல்லாது எந்நாளும்...
முயன்றால் முடியும் என்பவனுக்கு தடைக்கல் படிக்கல் போலே. முடிவில் வெற்றி தழுவும்.
முயன்றால் முடியும் என்பவனை முடிவில் நெருங்கும் நிலையான மதிப்பும் நிம்மதியான வாழ்வும்.....
(ஆக்கம் உடுமலை சு.தண்டபாணி......)💐💐💐🙏🏻🌹🌹🌹*


