லக்னாதிபதி எட்டாம் இடத்தில் பாவத்துவமாக இருந்தால்.?
ஜாதகர்.தன்னுடைய நிழலை பார்த்து. தானே பயந்து கொள்வார். மேலும்...
வழிய சென்று அசிங்கம் அவமானங்களை ஏற்படுத்திக் கொள்வார்..
ஆபத்தான இடங்களுக்கு சென்று ஆபத்தில் சிக்கிக் கொள்வார்.
லக்னாதிபதி எட்டாம் இடத்தில்
சுபத்துவமாக இருந்தால்.?
இருட்டிலும்... பகல் போல பயம் இல்லாமல் செல்வார்.
ஆழ்ந்த மறை பொருள் ஞானத்தை தேடிச் சென்று அதில் தேர்ச்சியும் பெறுவார்.
மறைமுகமாக கிடைக்கக்கூடிய அனைத்து விஷயங்களையும் தேடிச்சென்று எளிதில் தன் வசமாக்கி கொள்வார்.
அனைத்து ஆபத்துகளையும் வழிய சென்று. எதிர்கொண்டு. சாகசங்களை நிகழ்த்துவார்.
எட்டாம் அதிபதி லக்னத்தில் பாவத்துவமாக இருந்தால்.?
சதா சர்வ காலமும் மரண பயத்துடனேயே இருப்பார்.
ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி இவர்கள் உடலுக்குள் புகுந்து விட்டது போல நினைத்துக் கொண்டே இருப்பார்.
யாரோ எதையோ செய்யப் போக அனைத்து பழி பாவமும் இவர்கள் தலையில் வந்து விழுகும்.
குற்றம் செய்யாத நபராக இருந்தாலும்.
இவர்கள் மீது குற்றங்கள் திணிக்கப்பட்டு
குற்றவாளி ஆக்கப்படுவார்கள்.
ஜாமின் கையெழுத்து போட்டு வாங்காத கடனுக்கு வட்டி கட்டி கொண்டிருப்பார்கள்.
உலகில் எந்த மூலைக்கு சென்றாலும்...
அசிங்கம் அவமானம் இவர்களை பின் தொடர்ந்து கொண்டே வரும்.
எட்டாம் அதிபதி லக்னத்தில் சுபத்துவமாக இருந்தால்.?
இவர்களிடம் எப்பொழுதுமே குருட்டு தைரியம் இருக்கும்.
குருட்டு அதிர்ஷ்டத்தினால்
ஒரே நாளில் செல்வந்தர்கள்
ஆவார்கள்.
அதுமட்டுமல்ல ...
மற்றவர்களுக்கு புலப்படாத
பலவிதமான அமானுஷ்ய விஷயங்கள் இவர்களுக்கு எளிதில் புரியும்..
பிறருடைய ரகசியங்களை இவர்கள் கேட்காமலேயே இவர்களிடம் ஒப்பித்து விட்டு செல்வார்கள்.
மிகப்பெரிய ஆபத்துகளும்
கடுமையான நோய்களும்
கானல் நீர் போல இவர்களிடம் வந்து காணாமலேயே மறையும்..
மற்றபடி...
அட்டமாதிபதி லக்னத்தில் சுபத்துவமாக இருப்பதால்
ஜாதகருக்கு...
ஆயுள் தீர்க்கமும் உண்டு.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628 #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🚹உளவியல் சிந்தனை #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள்


