#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ்
*தூய்மை பற்றி இஸ்லாம்*
(8)
*உள்ளத்தை தூய்மைப் படுத்துதல்*
ஒருவரை பார்க்கும் பொழுதே பல கெட்ட எண்ணங்களுடன் அவர்களுடன் பழகுபவர்களையும் உதட்டில் தேனும் உள் நாக்கில் விஷமும் வைத்து வாழ்பவர்களும் இரட்டை வேடம் போடுபவர்களும் மக்களில் ஏராளம் உள்ளனர். மனிதர்களிடத்தில் நற்பேறு வாங்குவதற்காக நல்லவர்களாக நடிப்பவர்களோ இறைவனிடத்தில் உண்மையாளர்களாக இருப்பதில்லை. மனிதர்களால் வெளிப்படையானதை மட்டும் தான் பார்க்க இயலும். ஏனெனில் கெட்டதை செய்து கொண்டிருப்பவர்கள் மனிதர்களின் பார்வையில் நல்லவர்களாகவும் நல்லதை செய்ய நினைத்து முடிவு கெட்டதாக அமைந்து மனிதர்களின் பார்வையில் கெட்டவர்களாகவும் காட்சி கொடுக்கலாம். இறைவனோ அவனுடைய வெளித்தோற்றத்தை பார்க்காமல் உள்மனதை பார்க்கின்றான்.
உள்ளத்தின் மீதும் அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக!அதன் நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான்.அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார்.
*அதைக் களங்கப்படுத்தியவர் இழப்பு அடைந்தார்.*
அல்குர்ஆன் 91 :7_10
*அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள்:* *அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக,உங்களுடைய உள்ளங்களையும் செயல்களையுமே அவன் பார்க்கிறான்.*
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் :முஸ்லிம் (5012)
*அஹ்னஃப் பின் கைஸ் அவர்கள் கூறியதாவது: (ஜமல் போரின்போது) இந்த மனிதருக்கு (அலீ(ரழி)அவர்களுக்கு) உதவி செய்வதற்காகப் போய்க்கொண்டிருந்தேன். அப்போது அபூபக்ரா (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து “எங்கே செல்கிறீர்?’ எனக் கேட்டார். நான் இந்த மனிதருக்கு உதவிசெய்திடச் செல்கிறேன்” என்றேன். அதற்கு அபூபக்ரா (ரழி) அவர்கள் “நீர் திரும்பிச் சென்றுவிடும்; ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “இரண்டு முஸ்லிம் மக்கள் தமது வாட்களால் சண்டையிட்டுக்கொண்டால் அதில் கொன்றவர், கொல்லப்பட்டவர் இருவருமே நரகத்திற்குத்தான் செல்வார்கள்” என்று கூறுவதைக் கேட்டேன். உடனே நான் “அல்லாஹ்வின் தூதரே! இவரோ கொலைகாரர்; (நரகத்திற்குச் செல்வது சரி) கொல்லப்பட்டவரின் நிலை என்ன (அவர் ஏன் நரகம் செல்ல வேண்டும்)?” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவர் தம் சகாவைக் கொல்ல வேண்டுமென்று பேராசைகொண்டிருந்தார்’ என்று சொன்னார்கள்” என்றார்கள்.*
நூல் : புகாரி : 31
*அனைத்து சூழ்நிலைகளிலும் தூய்மையை மேற்கொள்ளுதல் :*
ஒரு மனிதன் அவனுடைய எல்லா சந்தர்ப்பங்களிலும் வெளிப்படையான அந்தரங்கமான வாழ்க்கையிலும் படைத்த இறைவன் முதல் தன் குழந்தைகள் வரை உண்மையானவனாக வாழ்வதும் தூய்மையாகும். இதைத் தான் மக்களுக்கு மத்தியில் இறைவனிடத்தில் தூய்மையானவனாக நடந்து கொள்பவர்களுக்கு இறையச்சவாதி என்றும், வியாபாரத்தில் நேர்மையாக நடப்பவர்களுக்கு கை சுத்தம் என்றும், கொடுத்த வாக்கை நிறைவேற்றுபவர்களுக்கு வாய் சுத்தம் என்றும், கற்பொழுக்கத்துடன் நடப்பவர்களுக்கு கற்புக்கரசி என்றும் மக்களுக்கு மத்தியில் கூறுகின்றனர்.
இறைவனிடத்தில் தூய்மையாக

