ShareChat
click to see wallet page
search
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதம் ✍️🌹 வாக்குபதிவு இயந்திரங்கள் திரும்ப பெறும் பணிகள் குறித்த பயிற்சி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆய்வு தூத்துக்குடி, ஏப்.20 -- தமிழ்நாடு சட்டசபை பொதுத்தேர்தல் ஏப்ரல் 23 ல் நடைபெற உள்ளதை முன்னிட்டு வாக்குபதிவு முடிந்தவுடன் இயந்திரங்கள் மற்றும் ஆவணங்களை திரும்ப பெறும் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது. ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள மண்டல அலுவலர்கள் மற்றும் வரவேற்புரை பணியாளர்கள் கலந்து கொண்டனர் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி ஏப்.23 ஆம் தேதி வாக்குபதிவு நிறைவடைந்தவுடன் அனைத்து வாக்கு சாவடிகளிலிருந்தும் மண்டல அலுவலர்கள் மூலம் வாக்குபதிவு இயந்திரங்கள் கட்டுப்பாட்டு கருவிகள் (Control Unit) மற்றும் விவிபேட் (VVPAT ) இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்படும். வாக்குபதிவு இயந்திரங்களுடன், வாக்குசாவடி தலைமை அலுவரின் கையேடு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களும் கொண்டு வரப்படும். இவற்றை மண்டல அலுவலர்க ளிடமிருந்து வரவேற்பறையில் பணி அமர்த்தப்பட்டுள்ள பணியாளர்கள் முறையாக பெற்றுக் கொள்ள வேண்டும். வாக்குபதிவுக்கு பின்னர் இயந்திரங்களை சரியான முறையில் கையாளுதல் மற்றும் சான்றுகள் உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைத்தல் குறித்து இந்த பயிற்சி கூட்டத்தில் விளக்கி சொல்லப்பட்டது. இப்பணிகளை எவ்வித தாமதுமுமின்றி மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் வருவாய் அலுவலர் மூ. குருச்சந்திரன் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உஷா (விளாத்திகுளம்) பிரபு (தூத்துக்குடி) கெளதம் (திருச்செந்தூர்) செந்தில்வேல் முருகன் (திருவைகுண்டம்) சுப்புலட்சுமி (ஓட்டப்பிடாரம்) ஹிமான்ஷு மங்கள் (கோவில்பட்டி) உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள் - م EEIIERILEIEETIORS T0  TARUULIUADU LEGUSLATME ASSEMBLY : 20267 Ihru VISHU HAHAJAI LS 00 ~ [  م EEIIERILEIEETIORS T0  TARUULIUADU LEGUSLATME ASSEMBLY : 20267 Ihru VISHU HAHAJAI LS 00 ~ [ - ShareChat