ShareChat
click to see wallet page
search
அர்ச்சகர் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்றார் புரோ. ஒன்னும் புரியல 🤔 சரி நல்ல விஷயம் தான் 🙏 உனக்கு இப்ப தேவாரத்தில் நாலு பாசுரம் சொல்ல தெரியுமா, திருவாசகத்தில் நாலு பாடல் உன்னால வாசிக்க முடியுமா. நாலாயிர திவ்ய பிரபந்தம் அப்படின்னா என்னன்னாவது தெரியுமா,இதையெல்லாம் யார் எப்போது எழுதினார்கள் என்றாவது தெரியுமா.... தெரியாது புரோ. 😡 சரி போகட்டும் விடு. சேக்கிழார் எழுதிய பெரிய புராணமாவது தெரியுமா. தெரியாது புரோ. 😡 சரி அது கொஞ்சம் கஷ்டம்தான். இந்த ஆண்டாள் எழுதிய திருப்பாவை, திருவெம்பாவையாவது தெரியுமா. தெரியாது புரோ 😡 திருமூலர் அருளிய திருமந்திரமாவது தெரியுமா. அப்படின்னா என்னது புரோ. 😡 சரிதான் திருக்குறளாவது கோனார் உரை இல்லாமல் பொருள் புரியுமா. கஷ்டம் புரோ. 😡 பெரிய கோயில்களில் ஓதுபவர்கள்னு ஒரு சாரார் இருக்காங்க. அவர்கள் என்ன மொழியில் இறைவனை பாடுவாங்கன்னு உனக்கு தெரியுமா. ஓதுவார்னா யாரு புரோ. 😡 நாசமா போச்சு.🤔 சைவம் வைணவமாவது என்னனு தெரியுமா. 🙏 அசைவம் சாப்பிட பிடிக்கும் புரோ. 😡 சரி போகட்டும் ஒரு நாளாவது தமிழில் பஜனை பாடவாது போய் இருக்கியா... இல்லை புரோ. 😡 ஆமா தமிழில் பூசை பண்ண இவ்வளவு ஆர்வமா இருக்கியே, எப்படி🙏 எல்லோரும் கூவுறாங்க....நானும் கூவுறேன்😡 (இதுதாங்க இன்றைய புது புரட்சியாளர்களின் நிலை😢) #🙏கோவில் #💪இலட்சிய கனவு 💭 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ்
🙏கோவில் - ShareChat