MUTHUPANDIAN RAMKUMAR
706 views 1 months ago
அன்னபூரணி அன்னை பார்வதி தேவியே அன்னபூரனி. காசி (வாரணாசி) நகரின் தலைமைக் கடவுளாக அன்னபூரணி இருக்கிறார். காசி தல புராணம்படி ஒருமுறை ஈசனும் சக்தியும் சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்தார்கள். ஆட்டத்தின் இறுதியில் ஈசன் வெற்றி பெற்றார். சக்தியோ, ஈசன் தவறாக ஆடி வெற்றி பெற்றார் என்று எண்ணி வாதம் புரிந்தாள். ஈசனோ `சகலமும் மாயை, அதில் இந்த ஆட்டமும் ஒரு சிறிய மாயை’ என்றும், `அதனால் வெற்றி தோல்வியைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்' என்றும் கூறினார். ஆனால், சக்தியோ `சகலமும் மாயை என்றால் உயிர்களின் இயக்கமும் மாயைதானா?' என்று வினவினார். ஈசனும், `ஆம். அப்படித்தான்’ என்று கூற, இவ்வுலகம் பொருளால் ஆனது என்றும் பொருள்களுக்குள் ஆற்றல் (சக்தி) உண்டென்றும் நிரூபிக்க மறைந்தார். பார்வதியின் மறைவு உலக இயக்கத்தைப் பாதித்தது, உலகமே வெறுமையானது. எங்குமே உணவின்றி எல்லாரும் பசியால் வாடினர். மக்களின் பசியறிந்து பரிவுற்ற அன்னை பார்வதி, உருவான கடும்பஞ்சத்தினை போக்கவே அன்னை சக்தி திருமாலிடம் வேண்டி இந்த அட்சயப் பாத்திரத்தை பெற்று காசியில் எல்லோருக்கும் உணவளித்து வந்தாள். திருமாலே ‘அட்சய’ என்று சொல்லி முதலில் உணவிட்டதால் இந்த பாத்திரம் அட்சயப் பாத்திரம் என்றானது. சிவபெருமானும் அன்னையிடம் “இப்போது உலகம் பொருள்களால் ஆனது என்றும் மாயையல்ல என்றும் அறிந்து கொண்டேன்” என்றார். இதைக் கேட்டு மகிழ்ந்த பார்வதி, தன் கையால் உணவு வழங்கி மகிழ்ந்தார் அன்னபூரணி அன்னம் என்பது உணவையும் பூரணம் என்பது முழுமையையும் குறிக்கும். ஞானம், வைராக்கியம் என்ற மோட்ச சாதனங்கள் இரண்டையும் நமக்குப் பிச்சையிடுகின்றாள் அன்னபூரணி. இந்த அன்னபூரணி, ஒரு திருக்கரத்தில் கரண்டியையும் ஒரு திருக்கரத்தில் அன்ன பாத்திரத்தையும் தாங்கியவளாகத் திகழ்கின்றாள். தன் பக்தர்கள் அனைவரும் உண்ணும்வரை தான் உண்பதில்லை என்று காத்திருப்பவள் அன்னபூரணி ஆவாள். ஞானம், வைராக்கியம் என்ற மோட்ச சாதனங்கள் இரண்டையும் நமக்குப்பிச்சையிடுகின்றாள் அன்னபூரணி. இந்த அன்னபூரணி, ஒரு திருக்கரத்தில் கரண்டியையும் ஒரு திருக்கரத்தில் அன்ன பாத்திரத்தையும் தாங்கியவளாகத் திகழ்கின்றாள். மற்றொரு கதையும் உண்டு பிரம்ம தேவருக்கு ஐந்து தலைகள் சிவபெருமான் போலவே இருந்தது. பிரம்மதேவனை பார்த்து சிவனார் என நினைத்து வணங்கிய பார்வதி, குழப்பமாக ஆக அதே சமயம் தான் என ஆணவம் தலைக்கேறி பிரம்மா இருக்க பிரம்மனின் ஒரு தலையை அறுத்த சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பீடித்தது. பிரம்மனின் கபாலம் சிவன் கையிலேயே ஒட்டி கொண்டது. இந்த தோஷம் நீங்க பிட்சாடனாராக சிவபெருமான் பல இடங்களில் பிச்சை பெற்றார். ஆயினும் சிவன் கையை விட்டு கபாலம் விழவில்லை. அந்த பாத்திரத்தில் எந்த பொருளும் தங்கவில்லை. இந்த சமயத்தில்தான் பிட்சாடனாராக வந்த சிவபெருமான் அன்னபூரணியிடம் பிச்சை பெற்றார். அந்த நேரமே பிரம்மனின் கபாலம் சிவபெருமான் கையை விட்டு விலகியது. சிவாலயங்களில் சக்தியின் அம்சமான அன்னபூரணி அருளுகிறார். காசியில் பிரேத்தியேகமாக அருளுகிறார். கும்பகோணத்தில் ஸ்ரீ கும்பேஸ்வரர் கோவிலில் அன்னை மங்களாம்பாள் சன்னதியின் பின்புறம் ஸ்ரீ அன்னபூரணி அருள்பாலிக்கிறார். "அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கர ப்ராண வல்லபே ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹீ ச பார்வதீ". அன்னம் நிறைந்தவளே, என்றும் பூரணமாக இருப்பவளே, சங்கரனின் பிராண நாயகியே, அன்னை பார்வதியே, எமக்கு ஞான வைராக்கியம் ஏற்பட பிக்ஷை இட்டு அருள்வாய். #அன்னபூரணி
13 shares

More like this