#☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕋ஜும்மா முபாரக்🤲 #🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #🤲துஆக்கள்🕋 அடையாளமும் அதன் தன்டனையும்!
முக்கியமான மூன்று அடையாளங்களை
நபி ﷺ கூறினார்கள்:
«آيَةُ الْمُنَافِقِ ثَلَاثٌ: إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ»
"முனாஃபிக்கின் அடையாளங்கள் மூன்று:
பேசினால் பொய் பேசுவான்.
வாக்குறுதி அளித்தால் மீறுவான்.
நம்பி ஒப்படைக்கப்பட்டால் துரோகம் செய்வான்
ஹதீஸ்
புகாரி முஸ்லிம்
நான்கு அடையாளங்கள்
மற்றொரு ஹதீஸில் நபி ﷺ கூறினார்கள்:
«أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا خَالِصًا...»
"நான்கு குணங்கள் எவரிடத்தில் இருந்தாலும் அவர் முழுமையான முனாஃபிக் ஆவார்:
நம்பி ஒப்படைக்கப்பட்டால் துரோகம் செய்வான்.
பேசினால் பொய் பேசுவான்.
உடன்படிக்கை செய்தால் மீறுவான்.
சண்டையிட்டால் எல்லை மீறி அநியாயமாக நடப்பான்."
ஹதீஸ் புகாரி முஸ்லிம்
அல் குர்ஆனில் கூறப்படும் சில அடையாளங்கள்
தொழுகையில் சோம்பேறித்தனம் காட்டுதல்
மக்களுக்குக் காட்டிக்கொள்வதற்காக மட்டுமே அமல் செய்தல்
அல்லாஹ்வை மிகக் குறைவாக நினைத்தல்
முஃமின்களிடம் ஒரு முகமும் காபிர்களிடம் வேறு முகமும் காட்டுதல்
உள்ளத்தில் ஈமான் இல்லாமல் வெளியில் முஸ்லிமாக நடிப்பது👈
அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் ☝️
அன்பான சகோதர சகோதரிகளே 🤍🥰
நயவஞ்சகம் என்பது ஒரு சிறிய குற்றமல்ல
அது ஒரு மனிதனை உலகிலும் மறுமையிலும் அழிவுக்குள்ளாக்கும் மிகப் பயங்கரமான நோயாகும். ஒரு மனிதன் மக்களின் கண்களில் நல்லவனாகத் தோன்றலாம்
அவன் தொழலாம், நோன்பு நோற்கலாம், மார்க்கத்தைப் பற்றி பேசலாம் ஆனால் அவனது உள்ளத்தில் கபடமும், பொய்யும், துரோகமும் மறைந்திருந்தால், அவன் அல்லாஹ்வின் கோபத்திற்கு தன்னை ஆளாக்கிக் கொள்கிறான்
அல்லாஹ் குர்ஆனில் முனாஃபிக்களைப் பற்றி பேசும்போது, சாதாரண நரகத்தைப் பற்றி அல்ல; “நரகத்தின் மிகக் கீழான அடுக்கில்” அவர்கள் இருப்பார்கள் என்று கூறுகின்றான்.
(ஸூரத்துன் நிஸா: 145)
இதைவிட பெரிய எச்சரிக்கை வேறு என்ன இருக்க முடியும்?
சிந்தித்துப் பாருங்கள்! மறுமை நாளில் எல்லா மனிதர்களும் அல்லாஹ்வின் முன் நிறுத்தப்படுவார்கள். அந்நாளில் முனாஃபிக்கின் முகமூடி கிழிக்கப்படும். அவன் மறைத்து வைத்திருந்த அனைத்தும் வெளிப்படுத்தப்படும். மக்களின் முன்னிலையில் நல்லவனாக நடித்தவன், அல்லாஹ்வின் முன் அவமானப்படுத்தப்படுவான்.
குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:
👇👇👇
“அவர்கள் விசுவாசிகளையும் ஏமாற்ற முயல்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் தங்களையே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.”
(அல்-பகரா: 09)
முனாஃபிக் தனது புத்திசாலித்தனத்தால் மக்களை ஏமாற்றிவிட்டதாக நினைக்கலாம். ஆனால் இறுதியில் அவன் ஏமாற்றியது தன்னையே என்பதை உணர்ந்து கொள்வான்🖤
எனவே, சகோதரர்களே! நமது உள்ளங்களைப் பரிசோதிப்போம். நாம் பேசுவது உண்மையா? நமது வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுகின்றனவா? நம்பிக்கை வைக்கப்பட்டால் அதை பாதுகாக்கிறோமா? என்று சிந்திப்போம்
ஏனெனில், பொய், துரோகம் கபடம் இவை அனைத்தும் மனிதனை முனாஃபிக்கின் பாதைக்கு இழுத்துச் செல்லக்கூடியவை
யா அல்லாஹ்
எங்கள் இதயங்களை நிஃபாக்கிலிருந்து பாதுகாப்பாயாக🤲🤍
யா அல்லாஹ்
நன்மைகளை ஏவி தீமைகளை தடுக்கக்கூடிய உள்ளங்களாக எங்களுடைய உள்ளங்களை ஆக்கியருல்வாயாக🤲🤍
யா அல்லாஹ்
எங்களை உண்மையான முஃமின்களாக வாழவும், உண்மையான முஃமின்களாக மரணிக்கவும் அருள்புரிவாயாக🤲🤍


