#தற்போது செய்தி #செய்திகள்
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
அருப்புக்கோட்டையில் குடிநீர் பிரச்சனை கிடையாது
திமுக வேட்பாளர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேச்சு
அருப்புக்கோட்டை, ஏப்.08
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம், வெள்ளக்கோட்டை ,ஆகிய இரு பகுதிகளிலும் அருப்புக்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தீவிர பிரச்சாரம் செய்தார்.
கே. கே. எஸ். எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசுகையில்
அருப்புக்கோட்டையில் பெரும் பிரச்சனையாக இருந்தது குடிநீர், ஆனால் இப்போது அந்த பிரச்சனை கிடையாது. அருப்புக்கோட்டை நகராட்சியில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.வைகை குடிநீரை சுத்தகரித்து வழங்குவதற்கு கட்டங்குடியில் சுத்தகரிப்பு நிலையம் அமைத்துவரிக்கப்பட்ட குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.நான் அருப்புக்கோட்டை தொகுதி மக்களுக்கு இரண்டு தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டங்களை பெற்றுத் தந்துள்ளேன்.அருப்புக்கோட்டை நகரை சுற்றி நான்கு பக்கமும் நான்கு வழி சாலைகள், அருப்புக்கோட்டை பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் நிறைவடைந்த உடன் 25 ஆண்டுகளுக்கு கழிவுநீர் கால்வாய் பிரச்சனை இருக்காது.அருப்புக்கோட்டை நகராட்சியில் சிறப்பு வாய்ந்த பேருந்து நிலையம் வீட்டு அனைத்து வசதிகளையும் மக்களுக்காக நான் செய்து கொடுத்துள்ளேன். உங்க வீட்டு பிள்ளை எப்போதும் உங்களுடன் இருப்பேன் .எந்த நேரமும் என்னை தொடர்பு
கொள்ளலாம் .அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் இவ்வாறு கூறினார்.பிரச்சாரத்தில் முன்னாள் யூனியன் சேர்மன் சுப்புராஜ், முன்னாள் நகர மன்ற தலைவர் சிவப்பிரகாசம், நகர மன்ற தலைவர் சுந்தர லட்சுமி சிவப்பிரகாசம், நகர மன்ற துணைத் தலைவர் பழனிச்சாமி, நகர திமுக செயலாளர் ஏ. கே .மணி ஒன்றிய திமுக செயலாளர்கள் பாலகணேசன், பொன்ராஜ், திராவிட நலக்குழு அமைப்பாளர் சோலையப்பன்,மாவட்ட விவசாய தொழிலாளர் அணி தெற்கு மாவட்ட துணை அமைப்பாளர் எஸ். பாலன்,
கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை நகர அமைப்பாளர் தியாகராஜன், தெற்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் அழகு ராமானுஜம்,34 ஆவது வார்டு செயலாளர் சக்தி, மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


