ShareChat
click to see wallet page
search
இரண்டு புள்ளிகளுக்கு இடையில் உள்ள குறைந்தபட்ச தூரமே நேர்வழி ஒருமுறை பகவானைத் தரிசிக்க சில கிராமத்தினர் வந்தனர். அவர்கள் பகவானிடம் 'சுவாமி! மனசைக் கட்டுப்படுத்த உபதேசம் சொல்லுங்க!' என்றனர். "மனசு எங்கேயிருந்து வர்றதுன்னு பாக்கணும். நாம் யார்ன்னும்... நாம் எங்கிருந்து வந்தோம்ன்னும் விசாரிக்கணும்' என்றார். அவர்கள் விடைபெற்றனர். பகவானும் மலைக்குச் சென்றார். அப்போது ஹாலில் இருந்த கணபதி முனிவர் பகவான் உபதேசிக்கற விசார மார்க்கம் பெரிய பண்டிதர்களுக்கே கஷ்டம், ஆனா தரம் பாக்காம எல்லாருக்கும் சொல்றாரே! அவங்களுக்கு புரிஞ்சுச்சான்னு எனக்கு சந்தேகம்தான். பகவான் ஏதாவது பூஜை ஜபம் சொல்லியிருந்தா நல்லாயிருந்திருக்கும்' என்று கூறிவிட்டு அவரும் இருப்பிடம் திரும்பினார். பகவான் மலைக்குச் சென்று திரும்பியதும் இது பகவானிடம் தெரிவிக்கப்பட்டது. "என்ன செய்யறது| எனக்கு அதுதான் தெரியும்” என்றார் பகவான். சிறிது நேரம் கழித்து, "சாஸ்திரோக்தமா உபதேசம் பண்ணனும்னா முதல்லே அவா தகுதியை பார்ப்பார். தகுதியா இருந்தா பூஜை, ஜெபம், தியானம்ன்னு படிப்படியா உபதேசிப்பார். பிறகு தக்க காலத்தில் இதெல்லாம் பூர்வாங்கம்தான். உண்மையை உணர்றதுக்கு இதெல்லாம் விடணும்னு 'கழற்றி' சொல்வார். சரியை கழற்றி, கிரியை கழற்றி, யோகம் கழற்றின்னு இதெல்லாம் ஏன் விடணும்னு விளக்குவார். "பிறகு பரமார்த்த உண்மையைச் சொல்லுவார். நீயும் நீ பாக்கற எல்லாம் ஒரே பொருள் தான்; பிரம்மம் தான்னு சொல்லுவார். இதை உணர நீ யார்ன்னு பார்! நீ இருக்கியே அந்த இருப்பு உடம்பு இருக்கிறப்பையும் உடம்பு இல்லாத தூக்கத்துலேயும் மாறாம அப்படியே இருக்கு! அதனாலே அதைத் தெரிஞ்சு சும்மாயிருன்னு முடிச்சுப்பார். "நேரே உண்மையையும் அதுக்கான நேர்வழியையும் சொல்லித் தர்றத விட்டுட்டு ஏன் இந்த சுத்து வழி? ஏகப்பட்டதை செய்யச் சொல்லி பிறகு ஏன் அதை விடச் சொல்லணும்?” என்றார் பகவான். நமோ ரமணா🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿‍♂️ #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
பகவான் ரமணர் - ShareChat