D Muthu Prakash, Kanchipuram 💐
#அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 11ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 14.06.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்:
========
தவமே தவமெனவே தானிருந்து வையகத்தில்
பொறுதி சதமாய்ப் புண்ணியனார் தானிருந்து
உறுதியுட னையா உகஞ்சோ திக்கலுற்றார்
நாரா யணரும் நல்லவை குண்டமெனப்
பேரா னதுநிறைந்து புண்ணியனார் தெச்சணத்தில்
மனுநிறமாய் வந்து மனுவைச்சோ தித்தெடுக்கத்
தனுவை யடக்கித் தவசிருக்கா ரம்மானை
விளக்கம்:
=========
தவத்துக்கு மேல் தவமாக மூன்று தவங்கள் இருந்து பொறுமை பெற்று உறுதியுடனும் நீதியுடனும் கலியுகத்தைச் சோதிக்க வைகுண்டர் மனதில் எண்ணினார். எனவே, தமது எண்ணத்தின்படி வைகுண்டர் மிகவும் உயர்வான தருமயுகத்தை நினைத்துத் தெச்சணாபூமியில் தாமரைப்பதியில் மனித குணத்தன்மையோடு உலகில் தோன்றி மனிதனைச் சோதித்து உத்தமர்களைத் தேர்ந்து எடுக்க வேண்டித் தமது உடம்பை அடக்கித் தவமிருக்க ஆரம்பித்தார்.
அகிலம்:
========
அய்யா வைகுண்டர் திருத்தவம்
உலகினில் மனுவாய்த் தோன்றி ஓர்இரு பதுநாலுக் கப்பால்
தலைமுறை வினைகள் போக்கிச் சடலத்துள் ளூற லோட்டி
மலைசெந்தூ ரலையி னுள்ளே மகரத்துள் ளிருந்து பெற்று
அலைகடற் கரை நாரா யணரெனப் புவியில் வந்தார்
விளக்கம்:
=========
பூவுலகில் மனிதனாய்த் தோன்றி, தமது இருபத்து நான்கு வயதிற்கு பிறகு முன் வினைகளை எல்லாம் போக்கி, தமது உடலுக்குள்ளே தீயவற்றை உருவாக்கும் சக்திகளை எல்லாம் வெட்டி எறிந்து, திருச்செந்தூர்க் கடலினுள்ளே மகர இலட்சுமியின் வயிற்றினுள் சென்று அங்கு மூன்று நாள் இருந்து அலைவீசும் கடலின் கரையில் வாழும் ஆண்டியாகிய நாராயணராக மாற்றம் அடைந்து வைகுண்டராக என்ற பெயர் பெற்று தெச்சணாபூமிக்கு வந்தடைந்தார்.
அகிலம்:
========
வந்தந்த நாட்டி லுள்ள வன்குற்ற மதனைக் கேட்க
நந்திகோன் விபூதி சாற்றி நாடிய தவங்க ளேற்றி
முந்தநாள் மூவர்க் கெல்லாம் முதன்மையாய்ச் சாதித் தேற்றி
சந்ததஞ் சாகா விஞ்சைத் தலைவனாய்ச் சமைய வென்றே
விளக்கம்:
=========
வைகுண்டர் தெச்சணாபூமி வந்து, அங்குள்ள மக்களின் குற்றம் குறைகளைக் கேட்டுப் பரிசோதிக்க நந்திகோன் ஆகிய ஈசருடைய விபூதியைத் தமது நேற்றியில் பூசி, தாம் நாடிய தவங்கள் மூன்றையும் முடித்திடவும், ஏற்கெனவே, வாழ்ந்து வரும் மூவர்களுக்கும் முதன்மை உள்ளவராய் வெற்றி பெற்று உருவாகிடவும், எப்போதும் சாகாது இருக்கும் உயர்வான உபதேசத்தைப் பெற்ற தலைவனாக அமையவும் தவம் செய்ய ஆரம்பித்தார்.
அகிலம்:
========
நீதிய ரோமம் வீசி நினைவொன்றைக் கருணை வாசி
சாதிக ளுரைக ளாற்றிச் சடத்துற வாசை யற்று
வாதியாங் கார மற்று மலசல மதங்க ளற்று
ஆதியைக் கருணை நாட்டி அவர்தவம் புரிந்தா ரையா
விளக்கம்:
=========
சக்தி பொருந்திய ரோமமம் போன்ற சுழிமுனை நாடியைப் பிடித்துப் பரம்பொருள் நினைவோடு கருணையான வாசிமுனையில் நின்று சாதி சமய எண்ணங்களும் நினைவுகளும் நீக்கப்பெற்று, மக்கள் உறவாசை இல்லாமல் எப்போதும் வாதித்துக் கொண்டிருக்கும் அகங்காரம் இல்லாமல், மல சலம் அகற்றும் எண்ணம் சிறிதுமின்றி, ஆதி பரம்பொருள்மேல் தமது முழு கருணை நினைவையும் நிலை நிறுத்தி வைகுண்டர் தவம் புரிந்தார்.
.
.
அகிலம்:
========
ஆசையாம் பாச மற்று அனுதாரக் குளாங்க ளற்று
மாசதாம் வினைக ளற்று வாக்கலங் கார மற்று
நீசமாம் கலியை யற்று நீணிலத் தாசை யற்று
ஓசையாம் வெளியைத் தாண்டி ஒருவனைக்கண் டுகந்தா ரையா
.
விளக்கம்:
=========
தம்மைத் தொடர்ந்து வந்த மக்கள் கூட்டங்கள் எதுவும் இல்லாமல், மாசு பொருந்திய காரியம் எதுவும் செய்யாமல், அலங்காரமான வார்த்தைகள் பேசாமல், நீசரம் பொருந்திய கலியைத் தம்மிடம் வரவிடாமல் நீக்கி இவ்வுலக ஆசைகள் எல்லாவற்றையும் நீக்கி, எல்லாவற்றுக்கும் மேலான ஆதி பரம்பொருளை வைகுண்டர் கண்டு மகிழ்ந்து தவமிருந்தார்.
.
.
அகிலம்:
========
கண்ட வர்ப்பா லேற்று கண்சுழி முனையில் நாட்டிப்
பண்டவர் செகலில் பெற்ற படிமுறை தவறா நாட்டிக்
கொண்டவர் லோகந் தன்னைக் குமியவோர் தலத்தி லாக்கி
இரண்டது மறிய வென்றே இவர்தவம் செய்ய லுற்றார்
.
விளக்கம்:
=========
ஆதியாகிய பரம்பொருளைக் கண்ட வைகுண்டர் ஞானப்பாலைக் குடித்து, இது கண்களையும் சுழிமுனையை நோக்கும் வண்ணம் நிலை நிறுத்தி, முன்னர்க் கடலில் தந்தை நாராயணரால் உபதேசிக்கப்பட்ட உபதேசமுறை தவறாதவண்ணம் மனதை ஒரு நினைவாக நிலை நாட்டி, உலக மக்கள் எல்லாரும் தம்மை நோக்கி வர வசதியாகத் தாமரைப்பதியாகிய ஒரே இடத்தில் தம்மைத் தவப்பொருளாக்கிக் கொண்டு, தாம் மக்களைச் சோதிக்கச் செல்லும்போது தீயோர் நல்லோர் ஆகிய இரண்டு இனங்களையும் பிரித்தறிந்து கொள்ளும் பேறு பெற வேண்டும் என்றும் தவம் செய்தார்.
.
.
அகிலம்:
========
மனுதவ தாரங் கொண்டு வந்தவர் பிறக்க லுற்றார்
தனுமனு வோர்க ளெல்லாம் தழைத்துநீ டூழி வாழ்ந்து
வனுதர்மப் புவியைக் கண்டு மாள்வரா வாழ்வு வாழ்ந்து
துணிவுடன் மனதி லேற்றி சூரியத்தவசு நின்றார்
.
விளக்கம்:
=========
மனிதனாக அவதாரம் கொண்டு கடலில் வந்து விஞ்சை பெற்று அவர் வைகுண்டர் ஆனார். இவ்வுலக மக்கள் எல்லாரும் செழிப்புற்று நீடுழி வாழ்ந்து, தொடர்ச்சியாய்த் தரும புவியைக் கண்டு சாகாத வாழ்வு பெற்று வாழ்வதற்காக, வைகுண்டர் மிகவும் துணிவு கொண்டு ஒரே நினைவை மனிதில் நிலை பெறச் செய்து, சூரிய கலை, சந்திரகலை ஆகியவை மூலம் அக்கினி கலையாகிய சுழிமுனையில் நிலை நிறுத்திக் கடுமையான சூரிய தவம் செய்தார்.
.
.
அகிலம்:
========
முற்பிதிர் வழிக ளெல்லாம் முதன்மைபோ லாக வென்றும்
கற்பினைப் படியே தோன்றிக் கலியுக மதிலே வந்த
அற்புத மடவா ரோடும் ஐவர்தம் குலங்க ளோடும்
செப்பியச் சாதி யெல்லாம் செயல்பெறத் தவசி யானார்
.
விளக்கம்:
=========
தமது தந்தை வழி சந்ததியார் எல்லாரும், ஏற்கெனவே முதன்மை பெற்றிருக்கும் மக்களைப் போன்று உயர்நிலையாக வேண்டும் என்றும், அற்புதமான கன்னிகளோடும், அவர்கள் பிறந்த குடும்பத்தோடும், முன் மொழிந்த சான்றோர் இனம் முழுவதும் உயர்நிலையாக வேண்டும் என்றும் தமது திடமான எண்ணத்தின்படி இக்கலியுகத்தில் வந்து தவம்செய்து தவசி என கூறப்பட்டார்.
.
.
அகிலம்:
========
இத்தவ மதிலீ தெல்லாம் இயல்புடன் வசமே யாகக்
குற்றமே செய்வோ னீசக் கொடுகலி வழிகள் சாகக்
கர்த்தனார் கர்த்த னாகக் கலியுகத் தீர்வை யாக
உற்றவை குண்ட சுவாமி ஒருகுடைக் கரசும் பெற்றார்
.
விளக்கம்:
=========
இந்த தவத்தின் மூலம் எண்ணியவை எல்லாம் எளிதாகக் கைவசம் ஆகவும், குற்றம் செய்யும் நீசம் பொருந்திய கொடிய கலியன் வழியினரை நரகத்தில் தள்ளிச் சாகடிக்கவும், மூலப்பொருளுக்கும் மூலப்பொருளாகிக் கலியுகத்தை முடித்து வைக்கவும் கர்த்தனுக்கும் கர்த்தனாக இருந்து ஒரு குடைக்குள் அரசாளவும், கடுமையான தவம் செய்தார்..
.
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பதினொன்றாம் நாள் வாசிப்பு நிறைவு பெற்றது.
.
தொடரும்… அய்யா உண்டு.