நவக்கிரகங்களின் அம்சங்கள் நிரம்பிய
அனைத்து ராசிக்காரர்களுக்கும் பலனளிக்கும் அகோபிலம் நரசிம்மர் திருத்தலத்தில் நவக்கிரகளின் சான்னித்யம் உடைய நவநரசிம்ம மூர்த்திகள் யாவர் என்பதை தெரிந்துகொள்வோம் 🙏
1.அகோபில நரசிம்மர்: குரு பகவானின் அம்சம் உடையவர்
உக்ரமூர்த்தியான இவர் மலைமீது எழுந்தருளியுள்ளார். புராதனப் பெருமாள் இவரே.
2. பார்க்கவ நரசிம்மர்: சூரியனின் அம்சம் உடையவர்
மலையடிவாரத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளார். இராமரால் வழிபடப்பட்டவர் இவர். (பார்க்கவன் என்பது இராமபிரானின் திருப் பெயர்களுள் ஒன்று.)
3. யோகானந்த நரசிம்மர்: சனி பகவானின் அம்சம் உடையவர்
மலைமீது, தென்கிழக்கு திசையில் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளார். உக்கிரமாக அவதரித்த நரசிம்மர் இங்கே யோக நிலையில் அமர்ந்துள் ளார். பிரகலாதனுக்கு யோகம் கற்பித்த மூர்த்தி இவர்.
4. சத்ரவத நரசிம்மர்: கேதுவின் அம்சம் உடையவர்
கீழ் அகோபிலத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளார். குடை வடிவில் அமைந்துள்ள கோவிலில் பத்மபீடத்தில் அமர்ந்த வண்ணம் காட்சி தருகிறார் நரசிம்மர். அரிய வகை கருங்கல்லாலான திருவடிவம்.
5. க்ரோத (வராக) நரசிம்மர்: ராகுவின் அம்சம் உடையவர்
பாபநாசினி நதிக்கரையின் கிழக்கில் லட்சுமி நரசிம்மரும் வராக நரசிம்மரும் கோவில் கொண்டுள்ள னர். இரட்டை நரசிம்மர் தலம் எனும் பெயருடைய இவ்விடத்திலிருந்து பார்த்தால் வேதகிரி, கருடாத்ரி மலைகளுக்கிடையேயான பள்ளத் தாக்கு தெரியும். வராக குண்டத்திலிருந்து பாபநாசினி நதி ஓடி வருவதையும் காணலாம்.
6. கராஞ்ச (சாரங்க) நரசிம்மர்: சந்திரனின் அம்சம் உடையவர்
மேல் அகோபிலத்திலிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளார். கராஞ்ச மரத்தடியில் கோவில் கொண்டு, கையில் வில்லேந்தியுள்ளதால் சாரங்க நரசிம்மர் என்ற இப்பெயர் பெற்றார்.
7. மாலோல நரசிம்மர்: சுக்கிரனின் அம்சம் உடையவர்
"மா' என்றால் லட்சுமி. "லோலன்' என்றால் பிரியமுடையவன். நரசிம்மரின் உக்கிரத்தை லட்சுமி தணித்த படியால், லட்சுமிப்பிரியனான பெருமாள் பிராட்டியை மடியில் அமர்த்தியபடி லட்சுமி நரசிம்மராகக் காட்சி கொடுக்கிறார். அகோபிலத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் கோவில் கொண்டுள்ளார்.
8. பாவன நரசிம்மர்: புதனின் அம்சம் உடையவர்
பவனி நதிக்கரையில் கோவில் கொண்டதால் இப்பெயர் பெற்றார். அகோபிலத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இத்தலத்தில் வருடாந்திர உற்சவம் மிகச் சிறப்பாக நடக்கும்.
9. ஜ்வாலா நரசிம்மர்: செவ்வாயின் அம்சம் உடையவர்
மேரு மலையில் வீற்றுள்ளார். இரண்யனை வதைத்தவர் இவரே. வதைத்த இடமும் இதுவென்கின்றனர். இந்த நரசிம்மரைத் தரிசிக்க மிகக் குறுகிய வழியில் செல்ல வேண்டும். எட்டு கைகளுடனும், நான்கு கைகளுடனும் இரண்டு நரசிம்மர் திருவடிவங்கள் உள்ளன.
அகோபிலம் மலையின் மேலும் கீழுமாக மொத்தம் 9 நரசிம்மர் கோயில்கள் உள்ளன. எனவே இதனை "நவ நரசிம்ம க்ஷேத்ரம்' என்பர்.
இந்த நவநரசிம்ம கோயில்களையும் தரிசித்தால் நவக்கிரகங்களை ஒன்றாக தரிசித்த பலன் கிடைக்கும் அனைத்து கிரகங்களின் அருட்பார்வை கிடைக்கும் என்பது ஐதீகம். இராம ஸ்ரீநிவாஸன் ஓம் அகோபில நரசிம்மா போற்றி 🙏 #🕉️ ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏பெருமாள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🔍ஜோதிட உலகம் 🌍


