حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِسْحَاقَ السُّرْمَارِيُّ، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، قَالَ حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ بَيْنَمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَائِمٌ يُصَلِّي عِنْدَ الْكَعْبَةِ، وَجَمْعُ قُرَيْشٍ فِي مَجَالِسِهِمْ إِذْ قَالَ قَائِلٌ مِنْهُمْ أَلاَ تَنْظُرُونَ إِلَى هَذَا الْمُرَائِي أَيُّكُمْ يَقُومُ إِلَى جَزُورِ آلِ فُلاَنٍ، فَيَعْمِدُ إِلَى فَرْثِهَا وَدَمِهَا وَسَلاَهَا فَيَجِيءُ بِهِ، ثُمَّ يُمْهِلُهُ حَتَّى إِذَا سَجَدَ وَضَعَهُ بَيْنَ كَتِفَيْهِ فَانْبَعَثَ أَشْقَاهُمْ، فَلَمَّا سَجَدَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَضَعَهُ بَيْنَ كَتِفَيْهِ، وَثَبَتَ النَّبِيُّ صلى الله عليه وسلم سَاجِدًا، فَضَحِكُوا حَتَّى مَالَ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ مِنَ الضَّحِكِ، فَانْطَلَقَ مُنْطَلِقٌ إِلَى فَاطِمَةَ ـ عَلَيْهَا السَّلاَمُ ـ وَهْىَ جُوَيْرِيَةٌ، فَأَقْبَلَتْ تَسْعَى وَثَبَتَ النَّبِيُّ صلى الله عليه وسلم سَاجِدًا حَتَّى أَلْقَتْهُ عَنْهُ، وَأَقْبَلَتْ عَلَيْهِمْ تَسُبُّهُمْ، فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الصَّلاَةَ قَالَ ' اللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ، اللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ، اللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ ـ ثُمَّ سَمَّى ـ اللَّهُمَّ عَلَيْكَ بِعَمْرِو بْنِ هِشَامٍ، وَعُتْبَةَ بْنِ رَبِيعَةَ، وَشَيْبَةَ بْنِ رَبِيعَةَ، وَالْوَلِيدِ بْنِ عُتْبَةَ، وَأُمَيَّةَ بْنِ خَلَفٍ، وَعُقْبَةَ بْنِ أَبِي مُعَيْطٍ، وَعُمَارَةَ بْنِ الْوَلِيدِ '. قَالَ عَبْدُ اللَّهِ فَوَاللَّهِ لَقَدْ رَأَيْتُهُمْ صَرْعَى يَوْمَ بَدْرٍ، ثُمَّ سُحِبُوا إِلَى الْقَلِيبِ قَلِيبِ بَدْرٍ، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ' وَأُتْبِعَ أَصْحَابُ الْقَلِيبِ لَعْنَةً '.
அப்துல்லாஹ் (பின் மஸ்ஊத்) (ரழி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவிற்கு அருகில் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். குறைஷிகள் தங்கள் சபைகளில் (அமர்ந்து) இருந்தனர். அப்போது அவர்களில் ஒருவர், 'இந்த முகஸ்துதிக்காரரை நீங்கள் பார்க்கவில்லையா? உங்களில் யார் சென்று, இன்னார் குடும்பத்தினர் அறுத்த ஒட்டகத்தின் நஞ்சுக்கொடி (சவ்வு), இரத்தம் மற்றும் சாணத்தையும் (குடலிலுள்ள கழிவுகளையும்) கொண்டுவந்து, பின்னர் இவர் சஜ்தா செய்யும் வரை தாமதித்து, (சஜ்தா செய்ததும்) அதை இவரது இரு தோள்களுக்கு மத்தியில் வைப்பார்?' என்று கேட்டான்.
அவர்களிலேயே மாபெரும் துர்பாக்கியசாலி (அதற்கு) எழுந்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சஜ்தா செய்தபோது, அதை அவர்களின் இரு தோள்களுக்கு மத்தியில் அவன் வைத்தான். நபி (ஸல்) அவர்கள் சஜ்தாவிலேயே நிலைத்திருந்தார்கள். அவர்கள் சிரித்தார்கள்; (சிரிப்பின் மிகுதியால்) ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தனர்.
(இதைக்கண்ட) ஒருவர் ஃபாத்திமா (அலை) அவர்களிடம் சென்றார் - அப்போது ஃபாத்திமா ஒரு சிறுமியாக இருந்தார். அவர் ஓடி வந்தார். நபி (ஸல்) அவர்கள் சஜ்தாவிலேயே நிலைத்திருந்தார்கள். (ஃபாத்திமா) அதை அவர்களிடமிருந்து அகற்றினார். பிறகு அவர்களை (குறைஷிகளை) நோக்கித் திட்டினார்.
ரசூல் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும், 'அல்லாஹும்ம அலைக்க பிகுரைஷ், அல்லாஹும்ம அலைக்க பிகுரைஷ், அல்லாஹும்ம அலைக்க பிகுரைஷ்' (யா அல்லாஹ்! குறைஷிகளைப் பிடிப்பது உன் பொறுப்பாகும்) என்று மூன்று முறை கூறினார்கள். பிறகு பெயர்களைக் குறிப்பிட்டார்கள்: 'அல்லாஹும்ம அலைக்க பிஅம்ரிப்னி ஹிஷாம், வ உத்பதப்னி ரபீஆ, வ ஷைபதப்னி ரபீஆ, வல்வலீதிப்னி உத்பா, வ உமைய்யதப்னி கலஃப், வ உக்பதப்னி அபீ முஐத், வ உமாரதப்னி வலீத்'."
அப்துல்லாஹ் (ரழி) கூறினார்: "அல்லாஹ்வின் மீது ஆணையாக! பத்ரு நாளில் இவர்கள் அனைவரும் வெட்டி வீழ்த்தப்பட்டிருந்ததை நான் பார்த்தேன். பிறகு அவர்கள் பத்ருடைய 'கலீப்' எனும் கிணற்றுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'கிணற்றுவாசிகள் சாபத்தால் பின்தொடரப்பட்டவர்கள்' என்று கூறினார்கள்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
ஸஹீஹுல் புகாரி : 520
#🕌இஸ்லாம் #🌜 RAMADAN🌛 #🕋யா அல்லாஹ் #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗 # 🕋ALLAH is the CREATOR🕋

