நைட் ஒரு மணிக்கு வேலை முடிஞ்சு வந்தா, நால்ரோட்டை தோண்டி போட்டு வைச்சிருக்காங்க.! அதை தாண்டுனாத்தான் வீட்டுக்கு போக முடியும். தோண்டுறவன் இதுல போங்கன்னு தூரத்துல ஒரு சந்தை காட்டுறான். உள்ளே போனா நாலஞ்சு நாய்கள். ரேபியஸ் வந்துதான் சாவோம் போலன்னு நினைச்சுகிட்டு மறுபடியும் பள்ளம் தோண்டிய இடத்துக்கே வந்தாச்சு. அப்புறம் நாலைஞ்சு வண்டிகள் வந்த பிறகு ஊர்வலமா அதே வீதியில நுழைஞ்சாச்சு. எங்கே இருக்கேன். எங்கே போறேன்னு ஒன்னும் புரியலை. கூட வந்தவனுக ஒவ்வொருத்தனா காணாம போய் ரோட்டுல நான் மட்டும்தான் இருக்கேன். எப்படியோ வந்தாச்சு. அங்கே வெயிட்டிங்குல இருந்த பறக்கும்படைகிட்ட மாட்டியாச்சு. பர்ஸ் & போனுன்னு செக் பண்றாங்க. அப்ப வந்த இன்ஸ்டா மார்ட் டெலிவரி பாய்கிட்ட பையை பிரிச்சு காட்ட சொல்றாங்க. உள்ளே தண்ணி பாட்டில். இதெல்லாமாடா ஆர்டர் போடுறாங்கன்னு போக சொல்லிட்டாங்க. யாரோ ஒரு கார்பரேட் கம்பெனிக்கு நைட் ஒன்றை மணிக்கு டெலிவரி பண்றவனால அவனோட சொந்த தொழிலில் இதே மாதிரியான உழைப்பை போட முடிவதில்லையே.? ஏன்.?
#🤔தெரிந்து கொள்வோம்


