ShareChat
click to see wallet page
search
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 உலக அளவில் புகழ்பெற்ற வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடத்தின் 34ம் ஆண்டு விழா நாகலாந்து மாநில ஆளுநர் பங்கேற்பு வேலூர் மாவட்டம், வேலூர் அடுத்த திருமலைக்கோடி, உலக அளவில் புகழ்பெற்ற ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி பீடத்தின் 34 ஆம் ஆண்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு 10008 மஞ்சள் நீர் குடங்களை பெண்கள் மற்றும் ஆண்கள் பக்தர்கள் யானைகளுடன், பல்வேறு சுப மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து சுயம்பு ஸ்ரீ நாராயணி அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். தங்ககோவில் நாராயணி பீடத்தில் நடைபெற்ற இந்த விழாவில், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சக்தி அம்மா தலைமையில் தங்கள் கைகளாலேயே சாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். ஆலயத்தில் ஸ்ரீ நாராயணி மூல மந்திர யாகம் நடைபெற்றது. இந்த யாகத்தில் மக்கள் அமைதியாகவும், நலமுடனும், நோய் நெடிகளின்றி வாழ வேண்டி பல்வேறு மூலிகைகள் யாகக் குண்டத்தில் இடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தங்ககோவில் நிறுவனர் சக்தி அம்மா தலைமையில் நடைபெற்ற யாகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மேலும், சிறப்பு விருந்தினராக நாகாலாந்து மாநில ஆளுநர் நந்த் கிஷோர் யாதவ் விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து அவரை கோயில் நிர்வாகம் சார்பில் கௌரவிக்கப்பட்டு கோயில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு ஆன்மிக பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்து ஸ்ரீ சக்தி அம்மாவின் ஆசி பெற்றனர்.
செய்திகள் - ShareChat