*ஸ்வேதகேது என்ற மாணவன்*
பன்னிரண்டு ஆண்டு குருகுலக் கல்வி பயின்று, அனைத்திலும் தேர்ச்சி பெற்று வீடு திரும்பினான்.
("இனி கற்றுக் கொள்வதற்கு என்று எதுவும் இல்லை. கற்க வேண்டிய அனைத்தையும் கற்று விட்டாய். எனவே நீ வீட்டிற்கு போகலாம்" என்று குருவே அவனை வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.)
அவன் வீட்டிற்குள் நுழைந்ததும், அவன் தந்தை அவனைப் பார்த்து " அறியாமையில் இருக்கும் ஒரு முட்டாளாக நீ திரும்பி வந்துள்ளாய்" என்றார்.
இல்லை.. நான் எல்லாவற் றையும் கற்று விட்டேன். என்னால் எல்லாவற்றையும் தலைகீழாக ஒப்பிக்கக் கூட முடியும் என்றான்.
நீ நடக்கும் நடையிலேயே எல்லாவற்றையும் நீ கற்று விட்டாய் என்பதை நானறிவேன். ஆனால் எது அனைத்தையும் கற்றுக் கொள்கிறதோ அதைப் பற்றி நீ எதையுமே அறியவில்லை. எனவே நீ முழுமையான அறியாமையில் இருக்கிறாய். எது அனைத் தையும் அறிகிறதோ அதை அறிந்து கொண்டு வா. வெறும் அறிவை அறிந்து கொண்டால் போதாது. நீ மீண்டும் உன் குருவிடமே போ என்றார் தந்தை.
பன்னிரண்டு ஆண்டுகள் அவன் குருகுலத்தில் தங்கி படித்திருக் கிறான். சான்றிதழுடன் வந்திருக்கிறான். இந்த நிலையில் பெற்றோராக நீங்கள்
என்ன செய்வீர்கள்? பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருப் பீர்கள், இல்லையா? ஆனால் அவன் தந்தை அவனை வீட்டை
விட்டு அனுப்புகிறார்.
அவன் மீண்டும் குருவிடமே வந்து, "நான் அறியாமையில் இருப்பதாக என் தந்தை சொல்லிவிட்டார். எனக்கு எல்லா வேதங்களும் உபநிஷத்துக் களும் தெரியும். நீங்கள் சொல்லிக் கொடுத்த அனைத் தையும் நான் மிகவும் சிரத்தை யுடன் கற்றிருக்கிறேன். ஆனால் அவர் என்னை அறியாமையில் இருப்பதாகச் சொல்கிறார். அறிவது எதுவோ அதை அறிய
வேண்டும் என்று சொல்கிறார்” என்கிறான்.
"ஓ! நீ அறிபவனை அறிய வேண்டுமா? நல்லது. கடந்த பன்னிரண்டு ஆண்டுகளும் நீ பலவற்றை அறிவதற்கே ஆர்வம் காட்டினாய். எனவே இந்த உலகில் அறிந்துகொள்ள வேண்டிய அந்த அனைத்து முட்டாள் தனங்களையும் உனக்கு சொல்லிக்கொடுத் தோம். நீ அவற்றையெல்லாம்
அறிந்து முடித்தாய். நாங்களும் உன்னை அனுப்பிவிட்டோம். இப்போது வந்து அந்த அறிபவனை அறியவேண்டும் என்கிறாய். அதை எப்படி
செய்வது என்று பார்க்கலாம். இப்போதைக்கு இதை செய், நம்
ஆஸ்ரமத்தில் உள்ள இந்த 400 பசுமாடுகளையும் ஓட்டிக் கொண்டு காட்டிற்குள் செல், வெறுமனே அவற்றுடன் இரு. அவை எப்போது ஆயிரம் மாடுகள் ஆகிறதோ அப்போது திரும்பி வா” என்றார் குரு.
400 பசுமாடுகள் 1000மாக ஆக எவ்வளவு காலம் ஆகும் என்று
உங்களுக்குத் தெரியுமா? ஆனால் அந்த குரு, "எவ்வளவு காலம் ஆனாலும் சரி, அவை எண்ணிக்கையில் 1000 ஆகும்போது நீ திரும்பி வா” என்று சொன்னார். ஸ்வேத கேதுவால் இதை நம்பமுடிய வில்லை. இவ்வளவு படித்திருக் கிறானே? அவன் கற்ற கல்வி எத்தகையது என்றால்,
நீங்கள் பெரிய கல்வி நிறுவனம் சென்று 20 வருடங்கள் படித்து டாக்டர் பட்டம் பெற்றது போன்றது. இத்தனைக்கப்புறம் உங்களைப் பார்த்து சொன்னா ர்கள், "நீ மாடு மேய்க்கப் போ" என்று.
ஆனாலும் அவன் சென்றான். ஆரம்பத்தில் பெரிய போராட்ட மாக இருந்தது. மனதுக்குள் புலம்பினான், "என்ன இப்படி ஆகிவிட்டதே. அனைவரும் என்னை புறக்கணித்து விட்டார்கள். இப்போது என் குரு
இந்த வேலையை எனக்குக் கொடுத்துவிட்டார்” என்று நொந்துகொண்டான்.
இப்படியே சில வாரங்கள், மாதங்கள் கழிந்தன. மனம் இதையே நினைத்து புலம்பிக் கொண்டிருந்தது.
உங்கள் மனம் இப்படியே தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்க வேண்டும் என்றால், அந்த மனத்திற்கு வெளியிலிருந்து ஏதாவது தகவல் வந்து கொண்டே இருக்க வேண்டும். அந்த தகவல்தான் மனம்
இயங்குவதற்கான எரிபொருள். அந்த எரிபொருள் இல்லாமல் மனம் இயங்காது. நீங்களும் உங்கள் மனதிற்கு ஏதாவது தகவலோ அல்லது செய்தியோ தொடர்ந்து கொடுத்துக் கொண்டே தான் இருக்கிறீர்கள்,
இல்லையா?
ஆனால், இப்போது அவன் காட்டில் பசுமாடுகளுடன் இருக்கிறான். ஆசிரமத்திலும் வீட்டிலும் என்ன நடந்து கொண்டிருக்கும் என்பதை அவன் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துவிட்டான். இந்த வேதம், உபநிஷதங்கள் குறித்த ஞானம் எல்லாம் மிகவும் சக்தி வாய்ந்ததுதான். ஆனால் அந்த
ஞானத்தை கேட்டுக்கொள்ள யாராவது கிடைத்தால்தான் அது சக்தியானது. காட்டில் அந்த அறிவின் பெருமையைக் கேட்க யாரும் இல்லை. சுற்றிலும்
பசுமாடுகள்தான் இருக்கின்றன. அவை வேதம் பற்றி பேசினால்
கேட்குமா? அவை வெறுமனே புல்லை 'கிர்க்..கிர்க்..கிர்க்' என்று
மென்றுகொண்டிருக்கும். மெதுவாக இந்த 'கிர்க்.. கிர்க்.. கிர்க்' ஓசை அவனுள் இறங்கி யது. வேதம், உபநிஷதம் என்று 12 வருடங்கள் அவன் கற்ற அனைத்தும் அவனை விட்டுப் போய்விட்டது.
காலம் செல்லச் செல்ல அவனும் ஒரு பசு போலவே ஆகிவிட்டான்.
பசித்தபோது சாப்பிட்டான். இல்லாவிட்டால் சும்மா அமர்ந்தி ருந்தான். அவன் கண்களின் வடிவம் கூட மாறிப்போய் விட்டன. அவன் கண்கள் பசுக்களின் கண்கள் போல் ஆகிவிட்டன. அவன் முழுக்க பசுவாகவே மாறிவிட்டான்.
ஆனால் அவன் இருப்புநிலை உண்மையாக இருந்தது. அவன் இப்போது தன் மனதுக்கு அடிமையாக இல்லை. அமர்ந் தால் முழுமையாக அமர்ந்தான். பசுக்களுடன் இருந்தபோது பசுவாகவே இருந்தான். ஒரு
மரத்தைத் தொட்டால் மரமாக மாறினான். மண்மீது அமர்ந் தால் மண்ணாக மாறினான். அவன் முழுமையான இருப்பு நிலையில் இருந்தான். ஏனென்றால், அவன் மனதுக் குள் வெளியிலிருந்து தகவல்
எதுவும் விழவில்லை.
பின்னர் அவன் தன் மொழியை மறந்தான், எண்களை மறந்தான். எனவே 1000 பசுக்கள் இருக்கின்றனவா அல்லது 10,000 பசுக்கள் இருக்கின்ற னவா என்றுகூடத் தெரிய வில்லை. அவன் வெறுமனே
இருந்தான். ஒரு நாள் பசுக்கள் அவனிடம் வந்து, "நாங்கள்
எண்ணிக்கையில் 1000 ஆகி விட்டோம். வா! நாம் குருவிடம் செல்வோம்" என்றன. எனவே, அவன் அவற்றை அழைத்துக் கொண்டு ஆசிரமத்திற்குத்
திரும்பினான். பசுக்கள் எல்லாம் ஆசிரமத்திற்குள் நுழைந்தன. அப்படியே நின்றன. அவனும் அப்படியே நின்றான். இப்போது ஆசிரமம் மிகவும் பெரிதாக வளர்ந்திருந்தது. சீடர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி
இருந்தது.
சீடர்கள் அங்கு வந்து நின்ற பசுக்களையும் அவனையும் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தா ர்கள். "ஸ்வேதகேது திரும்ப வந்துவிட்டான், திரும்ப வந்து விட்டான்" என்று ஆர்வத்துடன் கூவினார்கள். “நாம் பசுக்களை
எண்ணலாம். ஒருவேளை எண்ணிக்கையில் அவை 1000மாக இல்லாமல் இருக்க லாம். எனவே எண்ணிப் பார்ப்போம்” என்று எண்ணிப்
பார்த்தார்கள். சரியாக 1000 இருந்தன. குருவிடம் சென்று, “சரியாக 1000 பசுக்கள் இருக்கி ன்றன. அவன் திரும்பிவிட்டான்” என்றார்கள்.
"ஆயிரம் அல்ல, அவனையும் சேர்த்து ஆயிரத்து ஒன்று. ஏனெனில் ஸ்வேதகேது தன் தனித்தன்மையை முற்றிலுமாக இழந்துவிட்டான். அவன் 'முழுமையான இருப்பாகவே' மாறிவிட்டான் (He has just become
an absolute presence)" என்றார் குரு.
எனவே, உங்கள் முன் உள்ள ஒவ்வொன்றையும் ஒரு தகவலாக மாற்றாதீர்கள். இப்படி தகவலை சேகரித்துக்கொண்டே இருக்காதீர்கள். இப்படி சேகரித்து வைப்பது பழங்காலம் தொட்டே ஒரு பழக்கமாகி விட்டது, இல்லையா? ஆரம்பத் தில் உணவை சேகரித்தீர்கள். பின்னர் சிறிது சிறிதாக என்னென்னவோ சேகரித்தீர்கள். அப்புறம் கற்கள், மிருகங்களின்
தோல், இது அது என்று நிறைய சேகரித்தீர்கள். இப்போது நாம்
சேகரிக்கும் பொருள்கள் எண்ணில் அடங்காத அளவுக்கு இருக்கின்றன. இந்த கிரகத்திலிருந்து சேகரித்து வைத்தது போதாதென்று, கூடிய
விரைவில் அடுத்த கிரகங்களில் இருக்கும் பொருள்களையும் சேகரிக்கத் தொடங்கி விடுவோம்.
இப்படி எவ்வளவு சேகரித்தாலும் சரி, அதன் மூலம் நீங்கள் முமுமையை உணர முடியாது. அதன் மூலம் இறைமையை அறிய முடியாது. உங்கள் சேகரிப்புகளை எல்லாம் துறந்து வெறுமனே இருக்கும்போது தான் அதற்கான வாய்ப்பு திறக்கிறது..!🚩🕉🪷🙏🏼 #பகவான் ரமணர் #ஆன்மீகம் #பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி #🙏ஆன்மீக குருக்கள்🧘🏿♂️ #பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி



