ShareChat
click to see wallet page
search
பேய் இருக்கிறதா இல்லையா.? உலகில் நோய் என்று ஒன்று இருக்கிறதா இல்லையா.? இந்த இரு வேறு கேள்விகளும்.... அறிவியலுக்கும் அமானுஷ்யத்திற்குமானதாக இருந்தாலும். நோயை அனுபவித்தவர்களுக்கே நோயைப் பற்றி தெரியும். அதேபோல... பய உணர்வை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களுக்கே பேயை பற்றி தெரியும். பொதுவாக ... உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால்... எளிதில் நோய் தொற்று ஏற்படும். அதுபோல.. ஜாதகத்தில் ஒரு சில பாவகங்கள் பலவீனம் அடைந்து பாவத்துவமும் அடைந்திருந்தால் அதீத பய உணர்வு ஏற்படும்... அந்த வகையில்... பொதுவாக ... ஒருவரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்து... உடலுக்கு ஒவ்வாத உணவை உண்ணும் போது நோய் தொற்று ஏற்படுகிறது. அதுபோல... உதாரணமாக. ஒருவரின் ஜாதகத்தில் குறிப்பிட்ட பாவகங்கள் அல்லது குறிப்பிட்ட கிரகங்கள் வலுவிழந்து இருக்கும்போது.. அவருக்கு இயற்கையிலேயே அதீத பய உணர்வு.. இருக்கும். அப்படிப்பட்ட நபரை இருட்டு, அடர்ந்த காடு, சுடுகாடு, பிணவரை, கோர விபத்து இதுபோன்று சராசரி மனிதர்களுக்கே பயம் ஏற்படக்கூடிய இடங்களுக்கு சென்றாலோ.. அவற்றை பார்த்தாலோ.... பய உணர்வை மேலும் தூண்டச் செய்து... பேய் பிடித்ததை போன்ற உட்ச பட்ச பய உணர்வு நிலைக்குச் சென்று.. தன் நிலையை மறப்பார்கள். ஒருவர் இது போன்ற நிலைக்கு உள்ளாவதற்கு.... ஜோதிட ரீதியான காரணம் என்ன என்பதை விளக்கும் பதிவு தான் இது.!! பொதுவாக மனம் ஒரு குரங்கு என்பார்கள். மனக்குரங்கை சரியாக கையாளவில்லை என்றால்.. சாதாரண மனிதர்களே தன் நிலையை மறந்து விடுவார்கள். அந்த வகையில் மனதை குறிக்கக்கூடிய சந்திரன் அமானுஷ்ய கிரகங்களான ராகு உடன் நெருங்கி இருந்து.. சனியின் பார்வை அல்லது இணைவு பெற்று அதிக பாவத்துவமடைந்திருந்தாலும் அதீத பய உணர்வுடனேயே இருப்பார். மேலும் இந்த இணைவு... உங்களுடைய லக்னத்திற்கு அமானுஷ்ய பாவகமான எட்டாம் இடத்தில் இருக்கும் பட்சத்திலும்... அல்லது நீங்கள் எந்த லக்னமாக இருந்தாலும்.. கால புருஷ தத்துவத்திற்கு எட்டாம் இடமான விருச்சிகத்தில் இந்த இணைவு ஏற்பட்டிருந்தாலும். பய உணர்வு கண்டிப்பாக இருக்கும். இந்த கிரக அமைப்பில் உள்ள குழந்தைகளை... தனியாக படுக்க வைப்பதோ இருட்டில் தனியாக அனுப்புவதோ விளையாட்டாக பயமுறுத்துவதோ கூடாது. இந்த அமைப்பில் உள்ள நபர்கள்... நண்பர்கள் வற்புறுத்தினார்கள் உறவினர்கள் வற்புறுத்தினார்கள் என்கிற காரணத்தோடு பய உணர்வை தூண்டக்கூடிய இடங்களுக்கு செல்லக்கூடாது.. குறிப்பாக ... இதன் மூலம் ஒருவருக்கு எப்பொழுது பாதிப்பு ஏற்படும் என்றால் .. அது... சந்திரன் சனி, ராகு போன்ற தசா புத்தி காலத்தில்.. மட்டுமே தெரியவரும். மற்ற தசா புத்தி காலங்களில் இருக்காதா.? என்றால்.. அந்தந்த கிரக காரகத்துவம் சார்ந்த பய உணர்வு இருக்கவே செய்யும்.. அதாவது... சனியின் காரகத்துவம் வேலை தொழில் போன்ற வகையில் பய உணர்வு. சந்திரனின் காரகத்துவமான தாயாரை பற்றிய கவலை அல்லது நீர்நிலை சார்ந்த வகைகளில் பய உணர்வு இருக்கும். ராகுவின் காரகத்துவமான மாந்திரீகம் போன்ற வகைகளிலான பயம். அல்லது திருடர்களை நினைத்து பயம். பிரயாணம் செய்வதில் பயம். போன்றவாறு இருக்கவே செய்யும். அதை.... கடவுள் வழிபாடு தியானம் முறையான மருத்துவ கவுன்சிலிங் போன்ற விஷயங்கள் ... பய உணர்விலிருந்து விடு பட உதவும் என்றாலும்.... இதற்கு விதிவிலக்காக... சந்திரன் சனி ராகு விற்க்கு சுப கிரக பார்வை கிடைத்திருக்குமேயானால்... இதனால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது.. குறிப்பாக... லக்னாதிபதி வலுவுடனும் சுபத் தன்மையுடனும் இருக்கும் பட்சத்தில் இதைப் பற்றி ஜாதகர் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார். உங்கள் ஜாதக நிலைப்பாட்டை அறிய #🚹உளவியல் சிந்தனை #🔍ஜோதிட உலகம் 🌍 #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️தோஷ பரிகாரங்கள் #✡️ஜோதிட பரிகாரங்கள் ஜோதிடர் Jaya Kannan Call or WhatsApp 78100 22628
🚹உளவியல் சிந்தனை - 3 ஜோதிடர் Jaya Kannan WhatsApp Call or 78100 22628, 3 ஜோதிடர் Jaya Kannan WhatsApp Call or 78100 22628, - ShareChat