திருப்பதி பெருமாள் எதற்காக வந்தார்? என்ன சொன்னார்? திருமலையின் நீளம் என்ன? ஆதிசேஷன் போல கைங்கர்யம் செய்ய வேண்டும் ( தொடர்ச்சி ) 3
பெருமாள் அவதரிக்கப் இப்படி இடத்தை சொன்னதைக் கேட்ட ஆதிசேஷன் தனக்கு இதில் ஏதாவது கைங்கர்யம் உண்டா என எதிர்பார்க்க அவர் ஆதிசேஷன் பார்த்து," எல்லாவிதத்திலும் எனக்கு ஆட்பட்டவன் நீ. நீ மணலில் பூலோகத்திற்குச் சென்று பர்வதம் ஆக இரு. நான் வந்து திருவிளையாடல் செய்கிறேன் " என்று ஆதிசேஷன் பூலோகத்திற்கு அனுப்பினார்
ஒரு பாம்பு நெளிந்து நெளிந்து போனால் பார்க்க மேடு பள்ளம் போல் தோற்றுவது போல, ஒரு மலையாக தோன்றிய ஆதிசேஷன், நெளிந்து ஏழு மலைகளாகவும் சேஷாத்ரி என்ற பெயருடன் எம்பெருமான் அவதாரத்திற்க்குப் காத்திருந்தார். சர்வ விதமான கைங்கர்யம் தையும் செய்பவர் என்பதாலேயே இவருக்கு ஆதிசேஷன் என்ற பெயர்.
" நான் ஸ்வாமி இல்லை . நான் எம்பெருமான் சொத்து " என்று இருப்பதால் இவருக்கு " சேஷன் " என்று பெயர். இவரே எம்பெருமானின் முதன்மையான சொத்தாக இருப்பதால் இவரை " ஆதிசேஷன் " என்கிறோம். இவர் எம்பெருமானுக்கு எப்படியெல்லாம் சேவை செய்கிறார் என்று பார்க்கும்போது இவர் பெருமை நமக்கு புரியும்.
ஸ்ரீவைகுண்டத்தில் எம்பெருமான் பரவாசுதேவன் இருந்தால் இவர் அவர் அமரும் சிம்மாசனம் ஆகி விடுகிறார். பாற்கடலில் எம்பெருமான் வ்யூஹாவதாரம் செய்து மஹாவிஷ்ணு வாக இருந்ததால் இவர் படுத்தால் தானே பஞ்சு படுக்கை ஆகிவிடுகிறார். பெருமாள் நடந்தால் அவருக்கு குடையாகி விடுகிறார் (க்ருஷ்ணாவதாரத்திலே யமுனையில் கடக்கும்போது குடையானார் ). எம்பெருமான் நின்றால் தானே அவர் திருவடி க்கு பாதுகை ஆகி விடுகிறார் ( ஸ்ரீநிவாசனாக பெருமாள் நிற்க சேஷாத்ரி. . திருமலை ஆனார் ).
இப்படி
சர்வ தேச ( எந்த இடத்திலும் )
சர்வ கால ( எந்த சமயத்திலும் )
சர்வ அவஸ்தைகளிலும் ( எந்த நிலையிலும் )
எம்பெருமானுக்கு கைங்கர்யம் செய்பவர்கள் ஆதிசேஷன் போல் ஆசையும் செய்ய வேண்டும். .ஏழு மலைகளாகவும் " முதல் " யுகத்திலேயே தோன்றி விட்டார் ஆதிசேஷன் " சேஷாத்ரி " என்ற பெயருடன் எம்பெருமான் அவதாரத்திற்க்கு கலியுகம் வரை காத்துக் கொண்டிருந்தார்.
ஆதிசேஷன் சேஷாத்ரி என்ற ஏழு மலையாக ஆகி இருந்தார். காலப் போக்கில் ஒவ்வொரு மலைக்கும் தனிப் பெயர் ஏற்பட்டது.
சேஷாத்ரி ( உண்மையான பெயர் )
வ்ருஷபாத்ரி ( வ்ருஷபன் என்ற அசுரன் ஞானம் பெற்ற மலை )
சிம்மாத்ரி ( நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த இடம் )
அஞ்சனாத்ரி ( ஹனுமன் பிறந்த மலை )
கருடாத்ரி ( கருடன் அம்ருத கலசம் கொண்டு வந்தபோது அமர்ந்த மலை )
வெங்கடாத்ரி ( வெங்கடேசப் பெருமாள் இருக்கும் மலை )
நாராயணாத்ரி ( நாராயண பட்டருக்கு வைகானச முறைப்படி பூஜை செய் என உபதேசித்த மலை)tks nalini gopalan #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #✨கடவுள் #🙏பெருமாள் #✡️ராசிபலன்


