நான்....
கண்ணீர் விட்டு
அழும் போதெல்லாம்
உன் கைகள்
கண்ணீரை துடைக்க
வராதா என்று
ஏங்குவேன். !
அருகே நீ வர மாட்டாயா
என்றும் பார்ப்பேன்.
உலராமல் உன்
நினைவுகள்
என் நெஞ்சில்
இருக்கும்படி
பார்த்துக் கொள்வேன்.
சத்தம் போட்டு அழுதால்
நெஞ்சின் பாரம் குறையும்
என்பதால்.
யாரும் இல்லா இடத்தில்
போய் அழுவேன்.
என் நிலை பார்த்து
இந்த பனி இரவும்
நிலவும் கூட
என்னோடு அழும்
சாரல் மழையாக
அது எனக்கு ஆறுதலாக
இருக்கும் அப்போது.
ஒன்றில் மட்டும்
உறுதியாக இருக்கிறேன்
உன்னை மறப்பதில்லை
என்பதில். ! #💝இதயத்தின் துடிப்பு நீ


