ShareChat
click to see wallet page
search
திருகோகர்ண நாயகி அம்மை ஆச்சியின் அமுது செல்வர் திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய தேவாரம் மூன்றாம் திருமுறை 79வது திருத்தலம் திருக்கோகரணம் அருள்மிகு கோகர்ணநாயகி உடனுறை மகாபலநாதர் மரம்: வில்வம் கோடி தீர்த்தம் பாடல் எண் : 11 பண் : சாதாரி கோடல் அரவீனும் விரிசாரல் முன் நெருங்கி வளர் கோகரணமே ஈடம் இனிதாக உறைவான் அடிகள் பேணி அணி காழிநகரான் நாடிய தமிழ்க்கிளவி இன்னிசை செய் ஞானசம்பந்தர் மொழிகள் பாடவல பத்தரவர் எத்திசையும் ஆள்வர் பரலோகம் எளிதே பொழிப்புரை: காந்தட்செடிகள் பாம்புபோல் மலர்கின்ற அகன்ற மலைச்சாரலையுடைய வளம்பெருகும் திருக்கோகரணத்தை இடமாகக் கொண்டு இனிது வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி, ஆராய்ந்த தமிழ்ச்சொற்களால் சீகாழியில் அவதரித்த திருஞானசம்பந்தன் அருளிய இனிய இசைப்பாடல்களைப் பாடவல்ல பக்தர்கள் அரசராகி எல்லாத் திசையும் ஆள்வர். பின் சிவலோகமும் எளிதில் அடைவர். #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏾சனி பகவான் #🙏ஆன்மீகம்
🖌பக்தி ஓவியம்🎨🙏 - ShareChat