#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்களமுகம் நாளிதழ் ✍️🌹
ராதாபுரம்
தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் பாஜக வேட்பாளர்பாலகிருஷ்ணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
வள்ளியூர்.ஏப்.16
நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் எஸ்.பிபாலகிருஷ்ணன் ராதாபுரம்தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்றுசின்னம்மாள்புரம் கிராமத்தில் தனது வாக்கு தொடங்கி துலுக்கர்பட்டி கண்ணன்நல்லூர் சித்தூர், சீயோன்மலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்புக்கு சென்ற இடங்களில் அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும் பொதுமக்கள் பொன்னாடை அணிவித்தும் உற்சாக வரவேற்புஅளித்தனர்.முன்னதாக சித்தூர் வந்த அவருக்கு அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சார்பில் மாலை அணிவித்து வரவேற்றனர்.அதனையடுத்து சித்தூரில் உள்ள தென்கரை மகாராஜா கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.நிகழ்வில் அவருடன் பாஜக மாநில தொழிற்பிரிவு செயலாளர் அம்மா செல்வகுமார், அதிமுக ஒன்றியசெயலாளர்கள் பால்துரை,லாசர் மற்றும்தேசியஜனநாயக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள்கலந்துகொண்டனர்


