ShareChat
click to see wallet page
search
#💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 14.04.2026. . தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் இனிய தமிழ் புத்தாண்டு தின நல்வாழ்த்துகள் 💐. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== வகையான நல்ல வாய்த்தமகா விட்டிணுவும் பிறவிக்கு ஏற்ற பிள்ளை வருகுதென்று திறவி முதலோன் தெளிந்துமிகக் கொண்டாடி எதிரே ஆள்விட்டு இங்கழைக்க வேணுமென்று . விளக்கம் ========= இவ்வாறு அவ்வனத்தில் நடைவாறிசக் கொண்டிருக்கின்ற வேளையில், திருச்செந்தூரில் மகாவிஷ்ணு, நமது குழந்தையாகப் பிறவி எடுக்கத் தகுதியான பிள்ளை ஒன்று இதோ வந்து கொணடிருக்கின்றது என்று திறவி முதலோனாகிய திருமால் மனம் தெளிந்து மகிழ்ச்சியுற்று, அந்தப் பிள்ளையின் எதிரே ஆள் அனுப்பி எதிர்கொண்டு அழைக்க வேண்டும் என்று நினைத்தார். . . அகிலம் ======== அருகே தானின்ற ஆதி முனியான நல்ல முனிவரையும் நாரா யணரழைத்து வல்லவர்தாம் நீங்கள் வாரு மென அழைத்து வாருங்கோ பிள்ளாய் வாய்த்த முனிமாரே நேருங்க ளோடு நிகழ்த்துகிறே னோர்வசனம் நானே மித்த நல்லவுயி ரானதிங்கே தானே வருகுதுகாண் எந்தன் தவத்தாலே எதிரேபோய் நீங்கள் இங்கழைத்து வாருமென்று பதியேறும் பெருமாள் பகர்ந்து முனியயச்சார் . விளக்கம் ========= உடனே தமது அருகே நின்ற இரண்டு முனிவர்களை அழைத்து, நீங்கள் வல்லவர்களே, என்று கூறித் தமது அருகில் அழைத்து பிள்ளைகளே, உயர்வு வாய்ந்த முனிமாரே, உங்களுக்கு நேராக ஓர் அன்பு மொழி கூறுகின்றேன் கேட்பீர்களாக. நான் ஏற்கெனவே என் குழந்தையாக நியமித்த சிறப்பான உயிரானது இங்கே தானாக வந்து கொணடிருக்கின்றது. இந்நிகழ்ச்சி என்னுடைய தவத்தின் பயனால் நிகழ்கின்றது. முனிவர்களே, நீங்கள் போய் அவனை எதிர்கொண்டு அழைத்து வாருங்கள் என்று கூறி முனிமாரை அனுப்பினார். . . அகிலம் ======== அயச்ச முனிமார் அவ்வாயு போல்விரைவாய்ப் பயபட்ச முடனே பகர்ந்த இருமுனியும் எந்த வழியாய் இவர்கள்வரு வாரெனவே அந்தந்த வழிக்கு ஆலோட்டம் பார்த்துவந்தார் . விளக்கம் ========= இவ்வாறு அனுப்பப்பட்ட முனிவர்கள் காற்றைப் போன்று விரைவாகப் பயபக்தியுடன் கிளம்பிச் சென்று அவர்கள் எந்தெந்த வழிகளில் வர முடியுமோ அந்தந்த வழிகளில் எல்லாம் ஆலோட்டம் இட்டு ஆராய்ந்தனர். . . அகிலம் ======== வந்து ஒருவழியில் வரவேகண் டம்முனிவர் சந்துஷ்டி யாகித் தாழ்ந்துநமஸ் காரமிட்டு கண்டு குவித்துக் கனக முனிமார்கள் வண்டுசுற்று மார்பனுட வாய்த்தகரம் ரண்டதையும் முனியிருபேர் தோளில் உயர்த்தி மிகவேந்தி துணிவுடனே மாமுனிவர் தோளின்மே லேயிருத்திப் பதியி லிருந்தாற்போல் பார்மன்னனை யிருத்திக் குதிரைநடை கொண்டாற்போல் கொண்டோடி மாமுனிவர் கூட நடப்போர் குதித்துக்குதித் தோடிவர வாடி யிடைந்து மனுநருட்க ளோடிவர . விளக்கம் ========= கடைசியாக ஒரு வழியாக அவர்கள் வருவதைக் கண்டு முனிவர்கள் மிகவும் பணிவாக வணங்கிக் கைகுவித்து அவர்கள் அருகில் சென்றனர். அம்முனிவர் இருவரும் வண்டு சுற்றி வருகின்ற மணம் பொருந்திய மார்பையுடைய கரங்கள் இரண்டையும் ஆளுக்கொரு பக்கமாகத் தோளில் வைத்து உயர்வாக ஏந்திப் பிடித்து மிகுந்த துணிவுடன் அவரைத் தோளின் மேல் இருத்திக் குதிரை நடைபோல் துள்ளிக் குதித்து ஓடியும் நடந்தும் வந்தனர். அவர்களைப் பின்தொடர்ந்து வர முடியாமல் அவரோடு வந்த மனிதர்கள் வாட்டமுற்று ஓடி வந்தனர். . . அகிலம் ======== நல்ல பிறவியைத்தான் நன்முனிவர் கொண்டோடி வல்லசெந் தூர்ப்பதியில் வந்தனர்கா ணன்போரே வந்த முனிமார்கள் வாழ்த்தியந்த நல்லுயிரைச் சந்தனா வீதியிலே சடலந்தனை நிறுத்தி மாமுனிவர் தாமும் மாயோனை வந்துகண்டு சாமிநீர் கொண்டுவரத் தானுரைத்த நற்சடலம் அடியா ரெதிரேபோய் அழைத்துவந்தோ மையாவே . விளக்கம் ========= நல்ல பிறவியை முனிவர்கள் தூக்கிக் கொண்டு மகிழ்ச்சியோடு மேன்மையான திருச்செந்தூர்ப் பகுதிக்கு வந்தடைந்தடைந்தனர். இவ்வாறு வந்த முனிவர்கள் நல்ல உயிரை சந்தன மணம் வீசுகின்ற அந்த வீதியிலே நிலை நிறுத்தினர். பிறகு அந்த மாமுனிவர்கள் திருமாலைச் சென்று கண்டு, சுவாமி நீர் அழைத்துக் கொண்டு வரச் சொன்ன உயர்வான உடலை உமது அடியாராகிய நாங்கள் அவர் எதிரே சென்று எதிர்கொண்டு அழைத்து வந்தோம் அய்யா என்று பணிந்தனர். . . தொடரும்… அய்யா உண்டு.
💚Ayya 💗 Vaikundar💚 - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா நீசக் குலங்களைக் கருவறுக்க நெடிய நாரணர் பெற்றகன்றோ தோசப் புழுச்சாதி குலமறுக்கத் திருமால் நாரணர் பெற்றகன்றோ சீமை மைம்பத்தாறு தேசமெல்லாம் சொல்லொன் றுள்ளாள வந்தவரோ நாமம் பெரியதோர் வைகுண்டரின் Ku PRA நாமம் பெறவோங்க வந்தவரோ 1 தமிழ் புத்தாண்டுதின 14.04.2026 அகிலம். நல்வாழ்த்துகள் D Muthu Prakash ருங்கோ விளக்கின் வீரத்தனமாய் போல் ஒளி அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா நீசக் குலங்களைக் கருவறுக்க நெடிய நாரணர் பெற்றகன்றோ தோசப் புழுச்சாதி குலமறுக்கத் திருமால் நாரணர் பெற்றகன்றோ சீமை மைம்பத்தாறு தேசமெல்லாம் சொல்லொன் றுள்ளாள வந்தவரோ நாமம் பெரியதோர் வைகுண்டரின் Ku PRA நாமம் பெறவோங்க வந்தவரோ 1 தமிழ் புத்தாண்டுதின 14.04.2026 அகிலம். நல்வாழ்த்துகள் D Muthu Prakash ருங்கோ விளக்கின் வீரத்தனமாய் போல் ஒளி - ShareChat