ShareChat
click to see wallet page
search
#திருமால்நகரம்மதுரை #சித்ராபெளர்ணமி இன்று 30-04-2026 இரவு 09.50 முதல் 01-05-2026 நாளை இரவு 11.07 வரை *சித்ராபௌர்ணமி வழிபாடும் அதன்ரகசியமும்* சித்திரை மாதத்தில் ஸ்ரீசூரியபகவான் மேசம் ராசியில் பிரவேசிப்பார். அப்போது ஸ்ரீசூரியபகவான் உச்சம் பெறுவார். அதாவது தன்னுடைய அதிகமான கதிர்வீச்சு ஆற்றலை வெளியிடுவார். இவ்வாறு ஸ்ரீசூரியபகவான் ஆற்றலை வெளியிட்டு கொண்டு இருக்கும் சமயத்தில் ஸ்ரீசந்திரபகவான் சித்திரை நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் போது ஏற்படும் திதியான பொளர்ணமி திதி சித்ராபெளர்ணமி என அழைக்கப்படுகிறது . இதன் சிறப்ப என்னவென்றால் இந்த பௌர்ணமி நாளில் ஸ்ரீசூரியபகவானின் முழு ஆற்றலையும் ஸ்ரீசந்திரபகவான் உள்வாங்கி பிரதிபலிப்பார். அப்போது ஸ்ரீசந்திரபகவானின் பூரணமான ஒளி பூமிக்கு கிடைக்கும். ஆகையால் மற்ற மாதங்களில் ஏற்படும் பௌர்ணமியின் ஒளியை விட சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் ஸ்ரீசந்திரபகவான் பயணம் செய்யும் போது கிடைக்கும் ஒளி அளவு அதிகமாக பூமிக்கு கிடைக்கும், . அப்போது ஸ்ரீசந்திரபகவானின் பூரண கதிர்வீச்சு அதாவது ஆற்றல் அல்லது சக்தி பூமியில் வாழும் உயிரினங்களுக்கு கிடைக்கும். இதுபோன்ற பூரணமான ஸ்ரீசந்திரபகவானின் சக்தி வருடத்தில் ஒருநாள் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமியில் மட்டுமே கிடைக்கும் . ஒருவருடைய பிறப்பு ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைந்தவர்கள் , சந்திரனுடன் கேது ராகு சனி தொடர்பு பெற்றவர்கள் மனஅழுத்தம் , மனக்குழப்பம் , மனக்கலக்கம் ,பைத்தியம் பிடித்தவர்களாக இருப்பார்கள் . அவர்களுக்கும் மற்றும் சந்திரனின் ஆற்றல் தேவைப்படும் கற்பனையாளர்கள் , ஆராய்ச்சியாளர்கள் , கண்டுபிடிப்பாளர் போன்றோர்களும் சந்திரன் ஆற்றல் அதிகமாக கிடைக்கும் சித்ராபௌர்ணமி அன்று வீட்டை விட்டு வெளியே வந்து நிலவு ஒளியில் அதிக நேரம் இருந்தால் சந்திரனின் ஆற்றல் அதிக அளவு கிடைக்கும் . அப்போது சந்திரன் வலுப்பெற்று ராகு-கேது சனி போன்ற இருட்டு கிரகங்களால் மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறையும் . எனவே நம் முன்னோர்களும் ரிஷிகளும் முனிவர்களும் சித்ராபௌர்ணமி நாளை இறைவனுக்கு கொண்டாடும் திருவிழாவாக கொண்டாட வழிவகை செய்து எல்லோரையும் பூரண நிலவு ஒளியை பெறவைத்தனர். இதுதான் மெய்ஞான மற்றும் -விஞ்ஞான சூட்சமம் ஆகும் . எனவே நாமும் #சித்ராபௌர்ணமி நிலவு ஒளியில் அதிகநேரம் இருந்து #கள்ளழகர் இறைவனையும் வழிபட்டு இறையருளையும் ஸ்ரீசந்திரபகவானின் ஆற்றலையும் பெறுவோம்.. அன்று சத்ய நாராயண பூஜை செய்தல் பெரும் பலனை கொடுக்கும் #ராஜ்குமார்மதுரை ஓம்நமோநாராயணா #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #📸பக்தி படம் #🙏ஜெய் ஆஞ்சநேயா #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏 #✨கடவுள்
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - திருமால்நகரம்மதுரை சித்ராபௌர்ணமி 9 cok திருமால்நகரம்மதுரை சித்ராபௌர்ணமி 9 cok - ShareChat