ShareChat
click to see wallet page
search
#🚨கற்றது அரசியல் ✌️ #ரெங்கா! #renga-vamba! பிரதமர் மோடி முதல் ஆளாக தமிழகத்தில் அரசியல் மாற்றம் வந்திருக்கின்றது புதிய அரசியலோடு வரும் தவெகவினை வாழ்த்துகின்றேன் என வாழ்த்தியிருக்கின்றார், அப்படியே ராகுலும் வாழ்த்தியிருக்கின்றார் அதன் மொழிபெயர்ப்பை செல்வபெருந்தகையிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் மோடி சொன்னது வாழ்த்தாக இருந்தாலும் அதன் ராஜரீக மொழி தூய்மையான அரசியல் பணிக்கு அவர் விஜயினை அழைக்கின்றார், ஊழலற்ற லஞ்ச லாவண்யமற்ற சீழ்பிடித்த திராவிட சிந்தனையால் பாதிக்கபட்ட தமிழகத்தினை மீட்க அழைக்கின்றார் அதற்கு தாங்கள் முழு ஆதரவு தருவோம் என நேரடியாக சொல்கின்றார் மோடி எனும் மாமனிதனின் சிந்தனையும் நோக்கமும் அப்படியானது, இளையசமூகம் நல்வழியில் நாட்டுக்கு பணியாற்ற அழைப்பு விடுகின்றார் அதில் நாங்கள் உங்களை கண்காணிகின்றோம் எனும் உள் அர்த்தமும் புன்னகைக்கும்படி இருப்பதும் உண்மை விஜய் திமுகவுக்கு மாற்று என சொல்லி வந்திருப்பவர், திமுகவின் வழியில் அதே பழைய கள்ளை புதிய கலசத்தில் கொண்டுவருபவர் என ஒரு பிம்பம் இருந்தாலும் சில விஷயங்களை ஆராய்வது நலம் முதலில் பாஜகவோ அதிமுகவோ காங்கிரசோ எல்லோரும் விரும்பிய ஒன்று திமுக ஆட்சியின் அகற்றம், தெரியாமல் ஸ்டாலினிடம் தமிழகம் சிக்கிகொண்டது இவரால் ஒரு நன்மையும் விளையாது என்பதை உணர்ந்த தமிழகமும் அதில் தீவிரமானது, ஆனால் திமுகவின் மாய விளையாட்டுக்களை களத்தில் தாங்கும் வலிமை யாரிடமுமில்லை, அதை விஜய்தான் செய்து காட்டினார் ஆக தனி ஒரு மனிதனாக திமுகவினை அவர் வீழ்த்தி இரு கழகங்களின் முடிவுரையினை எழுதியிருக்கின்றார் என்பதால் பெரும் கவனத்தை அவர் பெற்றிருக்கின்றார், ரஜினியால் கூட இவ்வளவு பெரிய வெற்றி சாத்தியமா என்றால் இல்லை என்பதில் அவரின் இப்போதைய‌ பெரும் பலம் புரியும் நேரமிது இந்த வெற்றியினை அவரே எதிர்பார்க்கவில்லை, அவர் கூட்டணிக்கு முன்பு கதவை திறந்தே வைத்தார் திமுக தவிர எல்லா கட்சிக்கும் அழைப்பு விடுத்தார், ஆனால் காங்கிரசே கூட அவரை நம்ப தயங்கிற்று, பழனிச்சாமி தன்னை அழைக்கும் போது கூட்டு மந்திரிசபைக்கு விஜய் சம்மதம் தெரிவித்தார் ஆனால் தன்னை எம்ஜிஆர் போல் எண்ணிய பழனிச்சாமி அதனை ஏற்கவில்லை தன் செல்வாக்கு தனக்கு வெற்றிதரும் என நம்பினார், உண்மையில் இந்த தேர்தலில் ஸ்டாலினை விட பெரும் அடிவாங்கி இனி அரசியல் எதிர்காலமே இல்லை என தள்ளபட்டிருக்கும் நபர் பழனிச்சாமி, அதை பின்னர் பார்க்கலாம் பாஜகவும் முடிந்த அளவு விஜயினை கூட்டணிக்குள் இழுக்கபார்த்தது அதை தடுத்தவர் பழனிச்சாமி, காங்கிரஸ் விஜய் கூட்டணியினை தடுத்தவர் செல்வபெருந்தை மற்றும் ப.சிதம்பரம் என பல அவமானங்கள் விஜய்க்கு நிகழ்ந்தன‌ ஒருவரும் தன்னை நம்பி கூட்டணிக்கு வராத நிலையில்தான் விஜய் தனித்து நின்று ஆட்சியினை கைபற்றிகாட்டினார், இப்போது பழனிச்சாமி , ப.சி, திமுக என எல்லா தலைகளும் தொங்கிபோய் கிடக்கின்றன‌ இங்குதான் பாஜக விஜய் இடையேயான சில விஷயங்களை புரிந்துகொள்ளல் வேண்டும் பாஜக மேலிடத்துக்கு விஜயின் அவசியம் புரிந்தே இருந்தது அதனால்தான் 42 பேர் பலியாகி விஜய்க்கு பெரும்கண்டம் வந்தபோது டெல்லி பாஜக அவரை காத்தது, இன்றும் காத்து கொண்டே இருக்க்கின்றது, விஜயும் பெரிதாக பாஜகவினை சீண்டவில்லை என்பதை அவதானிக்கலாம் எல்லாம் முடிந்து விஜய் ஆட்சியில் அமரும் நேரமிது, இப்போது 10 இஸ்லாமியர்கள், ஏகபட்ட கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல சில பிராமணர்களோடு அவர் கட்சி ஆட்சியில் அமர்கின்றது விஜய் ஒரு கிறிஸ்தவர் என்பதும் அப்படியான பின்புலம் கொண்டவர் என்பதும் சொல்லபடுபவை ஆனால் அவர்கள் அரசியலில் விஜய் திருசெந்தூர் ஆலயத்துக்கு செல்கின்றார், திமுகவின் சமஸ்கிருத வெறுப்பு பிராமண வெறுப்பு அவரிடம் இல்லை என்பதை காட்சிகள் காட்டுகின்றன‌ ஷோப சந்திரசேகர் தம்பதியர் கிறிஸ்துவத்தை இப்போது கொண்டவர்கள் என்றாலும் திருகடையூர் அபிராமி கோவில் முதல் எல்லா கோவிலுக்கும் செல்பவர்கள் இந்து துவேஷிகள் அல்ல, ஸ்டாலின் போல் பிடிவாதக்காரர் அல்ல‌ இப்போதைக்கு பாஜக கொள்கையில் பல கொள்கைகள் விஜய்க்கும் பொருந்துகின்றன அதாவது வாரிசு அரசியல் எதிர்ப்பு துவங்கி அவரவர் மதம் அவர்க்கு, இந்துமத மதிப்பு, இந்துக்கள் ஆதரவு , இந்து ஆலயங்கள் அபிமானம் என பல விஷயங்களில் நெருக்கமாகின்றார்கள் ஊழல் ஒழிப்பு என்பது இருவருக்கும் பொதுவானது, புதிய புதிய சிந்தனைகள் இன்னும் பொதுவானது ஆக பாஜகவுக்கும் விஜய்க்கும் நல்ல ஒத்துழைப்பு இருந்தால் ஆந்திராவில் பெருகும் நலதிட்டம் போல, ஒடிசாவில் பெருகும் தொழில்கள் போல தமிழகமும் நிச்சயம் பல மாற்றம் பெறும் நிச்சயம் இனி தமிழகத்தில் பல மாற்றம் வரும், 75 ஆண்டுகால திராவிட குப்பைகள் நீங்கி சினிமா, அரசியல், கல்வி , ஊடகம், எழுத்து துறை என எல்லா பக்கமும் ஒருமாற்றம் வரும், இதுகாலம் இருந்த இந்து துவேஷமும் பார்ப்பண துவேஷமும் இனி குறையும் அதற்காக உபி யோகியின் ஆட்சியினை இங்கு எதிர்பார்க்க முடியாது ஆனால் திமுகவும் திராவிடமும் காட்டிய அந்த இறுக்கமான அரசியல், சனாதன ஒழிப்பு இந்துதர்மம் மேல் காட்டபட்ட கடும் இறுக்கம் இனி இராது, அறநிலையதுறையும் மெல்ல மெல்ல சீராகும் நிச்சயம் விஜயின் வருகை பெரும் மாற்றத்தின் அறிகுறி, அவரால் திமுகவினால் ஏற்பட்ட எல்லா பாதிப்பும் மெல்ல மெல்ல மாறும்,அந்த மாற்றம் சரியானதாக இருக்க விஜயினை மோடி அழைக்கின்றார் நிச்சயம் விஜயினை ஆதரித்ததில் இந்துக்கள் ஏராளம் உண்டு, திமுக அதிமுகவினால் ஏமாந்த அவர்கள் விஜயினை நம்புகின்றார்கள், தேசாபிமானிகளும் நம்புகின்றார்கள் மொகலாயரை வீழ்த்த இந்துக்கள் ஐரோப்பியரை அழைத்தது போல் திமுக எனும் மகா கொடுமைக்கார கட்சியினை வீழ்த்த விஜயினையும் அழைத்திருக்கின்றார்கள் அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றார்கள் ஆனால் இது அரசாட்சி அல்ல மக்களாட்சி காலம் என்பதால் விஜயும் இந்துக்களின் உணர்வுகள், தேசாபிமானிகள் உணர்வினை மதித்து நல்லாட்சி தருவார் என நம்புவோம் மாறாக தன்னை நம்பிய மக்களை விட தன்னை சுற்றியிருக்கும் சிறுகூட்டத்துக்கே நன்மை என்பதுபோல் அவர் திமுகவின் ஆட்சியினை இன்னொரு வகையில் வேறு பெயரில் தொடர்வாரார் என்றால் அது வீழ்ச்சியினைத்தான் கொடுக்கும் அவர் தேசத்துக்கு விரோதமான அரசியல், இந்துக்களுக்கு எதிரான அரசியல் செய்யாதவரை நல்லது மீறி இந்து துவேஷத்தை மதமாற்றிகள் ஆலோசனையில் செய்ய நினைத்தால் ஆனானபட்ட திராவிடத்தையே தூக்கி எறிந்த தமிழகம் அவரையும் தூக்கி எறிய தயங்காது என்பதை அவரே உணர்ந்திருப்பார் மோடியின் அழைப்பினை ஏற்று அவர் தேசமும் தமிழகமும் பயனுறும் நல்ல ஆட்சியினை கொடுக்கட்டும் அதற்கான நல்ல அதிகாரிகளையும் நல்ல வழியினையும் மாபெரும் தலைவர் மோடியே போதிப்பார் விஜய் ஒரு கிறிஸ்தவர் என அஞ்சுவது சரியல்ல, அவர் பெற்றோரும் அவரும் இந்து ஆலயங்களுக்கு செல்கின்றார்கள், இந்துக்களை மதிக்கின்றார்கள், இந்திய சட்டபடி எம்மதத்தவரும் முதல்வராகலாம், பாஜகவில் கூட நல்ல தேசாபிமான கிறிஸ்தவர் பலர் உண்டு அது சிக்கலே அல்ல‌ இந்து என தன்னை சொல்லிகொண்ட முதல்வர்களை விட நாத்திகன் என சொன்ன முதல்வர்களைவிட ஒரு விஜய் இந்து ஆலயங்களுக்கும் இந்துக்களுக்கும் ஆதரவு தருவாராகில் அது வரவேற்கதக்க விஷயமே இனி இந்துக்களை எதிர்க்க முடியாது நசுக்க முடியாது என்பதையும் கிறிஸ்தவர்களும் ஒரு கட்டுக்குள் இருந்தாக வேண்டும் என்பதையும் பழைய ஐரோப்பிய பாணி திமுகவின் கிறிஸ்தவ ஆதரவெல்லாம் காலாவதியாகிவிட்டது இனி கிறிஸ்தவர் தன்னை உணர்ந்து நாட்டையும் இந்துக்களையும் உணர்ந்துகொள்ளும் காலம் இது என்பதை விஜய் அறியாதவர் அல்ல‌ அதனால் அவர் மோடியின் அழைப்பினை ஏற்று நல்லாட்சி தருவதே வழி அதை தவிர்த்த எல்லாமும் அவரை படுகுழிக்குள்ளேதான் தள்ளும் முள்ளை முள்ளால் எடு, வைரத்தை வரத்தால் அறு, விஷத்தை விஷத்தால் முறி என்பது போல் கிறிஸ்துவத்தின் முகமூடியான திராவிடத்தை கிறிஸ்துவ முகம் கொண்டே அகற்றி அதனால் ஏற்பட்ட பாதிப்புகளௌ சுத்தம் செய்வது ராஜதந்திரம், மோடி அதைத்தான் செய்கின்றார், விஜய் இன்னொரு சந்திரபாபு ஆவாரா இல்லை கெஜ்ரிவாலாக மாறி வீழ்வாரா என்பதெல்லாம் அவர் கையில்தான் உள்ளது. ஆதாரம்: பிரம்மரிஷியார் வலைதள பதிவு. #அரசியல் பழகு. #கற்றுது அரசியல்
🚨கற்றது அரசியல் ✌️ - விஜய்க்கு மோடி மெசேஜ் அதிரும் தமிழக களம் BREAKING NEWVS | மலர் फ॰ा விஜய்க்கு மோடி மெசேஜ் அதிரும் தமிழக களம் BREAKING NEWVS | மலர் फ॰ा - ShareChat