இந்த தடுப்பூசியை தான் அரசாங்கமானது காவல்துறை மற்றும் வருவாய்த்துறையை வைத்துக்கொண்டு மக்களை வளைத்து வளைத்து தேடிப் பிடித்து போட்டு விட்டது! மக்களும் நீண்ட வரிசையில் நின்று இந்த தடுப்பூசியை போட்டுக் கொண்டார்கள். ஒரு சிலர் பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து கூட அடித்து பிடித்து வாங்கி போட்டுக் கொண்டார்கள்!
தடுப்பூசி போடாதவர்கள் வேலைக்கு செல்ல முடியாது, 100 நாள் வேலைக்கு செல்ல முடியாது, மாதச் சம்பளம் பெற முடியாது, தொடர்வண்டியில் செல்ல முடியாது, வானூர்தியில் செல்ல முடியாது, ஏன் வெளியிலே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு கூட தடுப்பூசி கட்டாயம், மாணவ மாணவிகள் தேர்வு எழுத வேண்டுமென்றால் தடுப்பூசி கட்டாயம், நியாய விலை கடைகளில் பொருட்கள் வாங்க வேண்டுமென்றால் தடுப்பூசி கட்டாயம், வெளியிலே நடமாட வேண்டும் என்றால் கூட தடுப்பூசி கட்டாயம் என்றெல்லாம் அச்சுறுத்தி தடுப்பூசியை பாமர எளிய மக்கள் முதல் பணக்காரர்கள் வரை வளைத்து வளைத்து பிடித்து போட்டு விட்டார்கள்.
கடைசியில் அந்த தடுப்பூசி போட்டதால் உடல்நிலையில் சிக்கல் ஏற்பட்டு மரணம் கூட நிகழலாம் என்று அந்த தடுப்பூசியை தயாரித்த நிறுவனமே அறிவித்துவிட்டு தடுப்பூசியை திரும்ப பெற்றுக் கொண்டு விட்டது.
ஆனால் இன்று அரசுகள் கள்ள மௌனம் காக்கின்றன! தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு பல்வேறு விதமான உபாதைகள், பக்க விளைவு நோய்கள் ஏற்பட்டு மரணம் கூட நிகழ்வது போன்ற மோசமான விளைவுகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தற்போது தான் அறிவித்துள்ளார்கள்.
ஆனால் தடுப்பூசி கட்டாயம் என்ற காலங்களிலேயே தமிழ்த்தேசியப் பேரியக்கம் தடுப்பூசியை கட்டாயப்படுத்தக் கூடாது, தடுப்பூசி வேண்டும் என்பவர்களுக்கு மட்டும் செலுத்த வேண்டும் என்று ஒவ்வொரு மாவட்டமாக தெருமுனை கூட்டம் நடத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி இந்த தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்த கூடியது என்று பரப்புரை செய்தது. அப்போது அரசும் கேட்கவில்லை, மக்களும் செவி சாய்க்கவில்லை. ஆனால் இன்றைக்கு என்ன நிலைமை?
எனவே தான் நாம் சொல்கின்றோம், தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒட்டுமொத்த மக்களுக்குமான திசை வழிகாட்டி என்று. #🙋♂ நாம் தமிழர் கட்சி #தமிழ்நாடு அரசியல் #😅 தமிழ் மீம்ஸ் #🚨கற்றது அரசியல் ✌️ #@அமானுஷ்யம்@( HORROR )


