ShareChat
click to see wallet page
search
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், சத்தியமங்கலம் பாலாற்றங்கரையில் அருள்பாலித்து கொண்டு இருக்கும் அருள்மிகு ஸ்ரீ மஹா முனிஸ்வரன் கோவிலில் சித்திரை பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக பிள்ளையார் பூஜை, கணபதி ஹோமம், கலச பூஜை நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது, நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர், கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது, மேலும் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சத்தியமங்கலம் தலைவர் இளங்கோ மற்றும் ஒன்றிய கவுன்சிலர் சிவா ஆகியோர் கலந்து கொண்டனர், மேலும் நிகழ்ச்சி ஏற்பட்டினை மேட்டுக்குடி எஸ்.ஏ மூர்த்தி, நாட்டாமை எஸ்.எம். சிவகுமார், முன்னாள் மணியம் காவல்துறை உதவி ஆய்வாளர் எஸ். எம். ஆறுமுகம், விஏஓ சதீஷ் மற்றும் விழா குழுவினர்கள், சத்தியமங்கலம் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் என நிகழ்ச்சி ஏற்பட்டின செய்திருந்தனர். சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள் - "061 |600 "061 |600 - ShareChat