ABUAYYASH KALAM@Editz
2K views 1 months ago
#அஸ்ஸலாமு_அலைக்கும்_வரஹ்மத்துல்லாஹி_வபரகாத்தஹு இப்பதிவு தங்களை பூரண உடல் நலத்துடனும் சீரிய இஸ்லாமிய சிந்தனையோடும் சந்திக்க எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஜும்ஆ நாளில் கடமையான குளிப்புப் போல் குளித்துவிட்டுப் (பின்னர்) பள்ளிக்கு வந்தால் ஓர் ஒட்டகத்தை இறைவழியில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்குள் வந்துவிட்டால் வானவர்கள் ஆஜராகி போதனையைக் கேட்கிறார்கள்.' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹ் புகாரி : 881. அத்தியாயம் : 11. ஜும்ஆத் தொழுகை #ஹஜ் #📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲துஆக்கள்🕋 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #மாமனிதர்_நபிகள்_நாயகம்
18 likes
33 shares

More like this