#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
நான்குநேரி தொகுதி சுயேட்சை வேட்பாளர் ஏழையின் ஒருவன் எம்.குமார் பொதுமக்களிடம் முதல் வாக்கு சேகரிப்பு பணியை தொடங்கினார்
நெல்லை .ஏப்.16
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் ஏழையின் ஒருவன் டாக்டர் எம்.குமார் சுயேட்சை வேட்பாளராக மிக்சி சின்னத்திற்கு போட்டியிடுகிறார் அவர் திருநெல்வேலி மாவட்டம் மறுகால் தலை பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பூலுடையார் சாஸ்தா வை வணங்கி தனது முதல் பிரச்சாரத்தை துவங்கினார் அதன் ஒரு பகுதியாக நேற்று மறுகால் தலை. சீவலப்பேரி.அவனா
பேரி.தோனிதுறை.மருதூர்.திருத்து.கீழபாட்டம்.புதுபனை.நடுவகுறிச்சி.வாகைக்குளம்.மேலபாட்டம்.திருமலை கொழுந்துபுரம்.
மணபடை.வீடு.கீழநத்தம்.(மேலூர்) கீழநத்தம்( வடக்கூர்) கீழநத்தம்.( தெற்கூர்)கிருபாநகர். கே.டி.சி.நகர்.அரிகுளம்.நொச்சிகுளம்.உத்தமபாண்டியகுளம்.வேலவன்குளம் மேல் புத்தநேரி.மேட்டுகுடி.
கிருஷ்ணாபுரம்.கொடிகுளம்.சிவத்திபட்டி.முத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கொளுத்தும் வெயிலில் பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரித்தார் அப்போது அவர் பேசியதாவது கிராமங்களில் சாலை வசதி.சுகாதாரம்.குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் மேம்படுத்துவேன் அனைத்து முக்கிய பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.
முன்னதாகஅப்பகுதிக்கு வந்த அவருக்கு பொதுமக்கள் மேளதாளம் முழங்க ஆர்த்தி எடுத்து மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர் இந்நிகழ்ச்சியில்
சமூக ஆர்வலர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்


