தமிழ்சீயான்43
🌿 இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.
06.07.2026 (திங்கள்)
மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
முதலாவது. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி பதிலுரைப் பாடல் திருப்பாடல் 145:8-ல், "ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்; பேரன்பு கொண்டவர்." என கூறப்பட்டுள்ளது.
இரக்கமும், கனிவும் கொண்ட நம் இறைவனுக்கு நன்றியாக இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
இரண்டாவது. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
"ஆண்டவர் இயேசு அவரைத் திரும்பிப் பார்த்து, “மகளே, துணிவோடிரு; உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று” என்றார். அந்நேரத்திலிருந்தே அப்பெண் நலம் அடைந்திருந்தார்." என வாசித்தோம்.
ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கைக் கொண்ட அனைத்து நோயுற்றவர்களும் குணமாகிட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
மூன்றாவது. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
இன்றைய புனிதர் புனித மரிய கொரெட்டி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாவலராவார்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த நீதி கிடைக்கவும், அவர்களது நல்ல எதிர்கால வாழ்விற்காகவும் இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
நான்காவது. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
இந்த புதிய வாரம் முழுவதும் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும் திறம்பட செய்யவும், குறித்த காலத்துக்கு முன்னமே நமது வேலைகளை வெற்றிகரமாக முடிக்கவும், தூய ஆவியின் துணையை வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஐந்தாவது. காணமற் போன குழந்தை இயேசுவை ஆலயத்தில் கண்டு பிடித்ததைத் தியானித்து,
தங்கள் குடும்பத்தினரால் மறக்கப்பட்டு பல ஆண்டுகளாக, வேண்டுதல்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அனைத்து உத்தரிய ஸ்தலத்தில் இருக்கும் ஆன்மாக்களும், இறைவனின் மோட்ச பாக்கியத்தை விரைவில் அடைய வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென. #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝️இயேசு #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️இயேசுவே ஜீவன் #✝பைபிள் வசனங்கள்
__________________________