#💥ஓம் ந ம சி வா ய💥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 கோவில் குறித்து, தூதனைத் தன்னைத் தோழமை அருளி என்று துவங்கும் தேவார பாடலை பாடியுள்ளார் சுந்தரர்.
அவர் சிவபெருமானை தனது நண்பராக பார்த்தார். சிவபெருமானும் அவரை தனது தோழனாக ஏற்றுக் கொண்டார்.
சாதாரண அரசியல்வாதிகளின் துணை கிடைத்தாலே போதும். சிலர் ஆட்டமே போட்டு விடுவார்கள். ஆனால், இந்தப் பாடலில் சுந்தரர் தன்னை ஒரு நாய்க்கு ஒப்பிடுகிறார்.
"நாயை விட கேவலமான நான் உன்னை மறந்து வேறு யாரை நினைக்கப் போகிறேன்" என்று இந்த பாடலில் அவர் சொல்கிறார்.
வி.ஐ.பி. களின் நட்பு கிடைத்தால் இப்போது ஊரையே கலக்கி விடுகிறார்கள். சட்டத்தை மீறி என்னென்ன செய்ய வேண்டுமோ, அத்தனையும் செய்கிறார்கள்.
சிவபெருமான் இந்த உலகத்திற்கே
வி. வி. ஐ. பி. யாக விளங்குபவர். சுந்தரரோ அவரது நண்பர். ஆனால் அவர் தன்னை உயர்ந்தவராக காட்டிக் கொள்ளவில்லை. நாயுடன் ஒப்பிட்டு பேசுகிறார்.
நாயை எப்படி எல்லாம் ஆட்டி வைக்கலாமோ, அப்படியெல்லாம் சிவன் சொன்னதற்கு ஆடுவேன் என நேரடியாக சொல்லும் அவர், என்னை ஆட்கொண்ட சிவனுக்கு நான் நாயைப் போல நன்றியுள்ளவனாய் இருப்பேன் என்றும் சொல்கிறார்.
எவ்வளவு உயர்ந்த இடத்தில் பணி செய்தாலும்,
பெரிய மனிதர்களின் நட்பைப் பெற்றிருந்தாலும், பேச்சிலும், நடத்தையிலும் தன்னடக்கம் வேண்டும் என்பதை இந்த தேவார பாடல் நமக்கு உணர்த்துகிறது.
இதோ முழுமையான பாடல்:
" தூதனைத் தன்னைத் தோழமை அருளித்,
தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும்,
நாதனை நள்ளாறனை பெரும் அமுதை,
நாயினேன் மறந்து என் நினைக்கேனே!"


