முன் ஏற
ஏணி தேடியவர்கள்,
இன்று உயரத்தில்
இன்னோர் ஏறும்போது
ஏணியையே எரிக்க நினைக்கிறார்கள்.
மூட சாதியை நொறுக்க
சிறுத்தை களமிறங்கினால்,
அது யாரின் வாசலிலும்
கட்டுப்பட்ட நாய் அல்ல.
விசில் சத்தமல்ல அது;
விடுதலையின் அறிவிப்பு.
பூ முடித்தவன்
புறந்தள்ளப்படவில்லை;
பூவை தனக்கே சொத்தாக்க நினைத்த
அகந்தையே புறந்தள்ளப்படுகிறது.
காத்திருங்கள்.
காலமும் பேசும்.
தேசமும் காணும்.
வர்த்தமானமும் எழுதும்.
சமூகநீதி
உங்கள் கையொப்பத்தில் பிறந்ததல்ல;
ஒடுக்கப்பட்டவர் அதிகாரத்தில் அமரும் போது
அதன் அர்த்தம் நிரூபிக்கப்படும்.
வெற்றி வன்மத்துக்கல்ல.
வெற்றி பிரதிநிதித்துவத்திற்கே. #🐱விலங்குகளின் சேட்டைகள்😂


