ShareChat
click to see wallet page
search
#💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 21.04.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======= விஞ்சையருளல் தொடர்ச்சி ============================ வர்மமதை வதைக்க வந்தேனெனச் சொல்லிமிகத் தர்ம மதைவளர்க்கத் தரணியில் வந்தேனென்று இம்முதலே யாறு இருப்பே தவசுபண்ணி மும்முதலோ னாகி முறைநடத்து என்மகனே மூக்குச் சுழியும் முச்சுளியும் முத்திமுத்தி நோக்குச் சுழியாய் நேர்நில்லு என்மகனே . விளக்கம் ========= வறுமையை ஒழிக்க இவ்வுலகில் நான் அவதாரம் எடுத்தேன் என்றும், தர்மம் பெரிது என்றும் உபதேசித்து வா என் மகனே. இப்பொழுது முதலே ஆறு வருடத் தவசை ஆரம்பித்து முப்பொருளுக்கும் முதற்பொருளாகி, நீ செயல்படுத்துவாயாக. மூக்கில் உருவாகும் மூன்று சுழிகளையும் தெளிவாகக் கண்டறிந்து எல்லாம் அறியக் காரணமாக இருக்கும் சுழிமுனை மையமாய் நிலை நிற்பாயாக. அகிலம் ======= பரமான பட்டணத்தில் பார்வைகொண் டேநாட்டிச் சிரமானது விரித்துச் சிறையே யிருமகனே ஏற்பதுபால் பச்சரிசி இருப்பது பார்மேலாகும் காப்பதுமா தர்மம் கண்ணே திருமகனே . விளக்கம் ========= உன் இரு கண்களின் பார்வைகளும் பரம்பொருள் இருக்கின்ற சகஸ்ரார பட்டணத்தை நோக்கியவண்ணம் இருக்கட்டும். உன் தலை முடியை விரித்துப் போட்டுச் சிறையில் இருப்பவரைப் போன்று நீ வாழ்ந்து வா. நீ உண்ணக் கூடியவை பாலும் பச்சரிசியுமாக இருக்கட்டும். உன் நினைவு இருக்க வேண்டிய இடம் உன்னுள்ளே காணக்கூடிய பரம்பொருளின் இருப்பிடம் ஆகும். என் கண்ணே, திருமகனே, நீ மாபெரும் தருமத்தைக் காக்க வேண்டும். . .அகிலம் ======= சந்தன வாடை சாந்துசவ் வாதுபுஸ்பம் எந்தன் திருமகனே எள்ளளவும் பாராதே வாடைபூ தீபம் மகிழாக் கலியுகத்தில் நாடை யழித்து நல்லயுக மேபிறந்தால் சொல்ல வொண்ணாத சுகந்தருவே னென்மகனே . விளக்கம் ========= எனவே, அதை அடைவதுவரை சந்தனம், சாந்து வகைகள், சவ்வாது, பூக்கள் ஆகியவற்றின் இனிய மணத்தினை நீ சிறிதளவுகூட நுகர்ந்து பார்க்காதே. இவ்வாறு பூ தீபம் போன்றவற்றின் வாசனையை நுகர்ந்து மகிழக்கூடாத இந்தக் கலியுகம் அழிக்கப்பட்டுத் தருமயுகம் பிறக்குமானால் அது முதலாக உனக்குக் கூற முடியாத இனிய சுகத்தினை தருவேன் என உபதேசித்தார். . . அகிலம் ======= கண்டாயோ மகனே கரிய பவிசுஎல்லாம் கொண்டாயோ விஞ்சை கூடுபிர காசமதாய் . விளக்கம் ========= பிறகு மகனே, அடைவதற்குரிய செல்வங்களை இந்த உபதேசங்கள் மூலம் நீ தெளிவாக அறிந்தாயா? எனக் கேட்டார். . . தொடரும்… அய்யா உண்டு.
💚Ayya 💗 Vaikundar💚 - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா மாயத் திருவுளம் பெற்றகன்றோ மான வைகுண்ட ராசக்கன்றோ வேதக் குருநாதன் பெற்றகன்றோ வீர லட்சுமி ஈன்றகன்றோ சீதக் குருதாயா ரீன்றகன்றோ தெய்வ வைகுண்ட ராசக்கன்றோ கிருஷ்ண மகாநாதன் பெற்றகன்றோ கிருபைக் குருநாதக் கண்மணியோ!் அகிலம்  21.04.2026 @ uthu Brakash விளக்கின் ஒவி போல்  வீரத்தனமாய் ஈஙகோ அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா மாயத் திருவுளம் பெற்றகன்றோ மான வைகுண்ட ராசக்கன்றோ வேதக் குருநாதன் பெற்றகன்றோ வீர லட்சுமி ஈன்றகன்றோ சீதக் குருதாயா ரீன்றகன்றோ தெய்வ வைகுண்ட ராசக்கன்றோ கிருஷ்ண மகாநாதன் பெற்றகன்றோ கிருபைக் குருநாதக் கண்மணியோ!் அகிலம்  21.04.2026 @ uthu Brakash விளக்கின் ஒவி போல்  வீரத்தனமாய் ஈஙகோ - ShareChat