ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 7 துடப்பங்கள் (ராஜ்யசபை MPகள்) பாஜகவில் சேர்ந்துள்ளதோடு, பஞ்சாப் மாநில AAP கட்சியின் MLA களையும் விலைபேசி தங்களின் பக்கம் இழுத்து தமிழ்நாட்டின் கூவத்தூரில் நடந்தது போன்ற ஒரு ஆட்சியை உருவாக்கவும் திட்டம் போட்டுள்ளனர் என்பதான செய்திகள் வெளிவருகின்றன.
சென்ற மாதம் ராஜ்ய சபையில் மொபைல் போன் ரீ சார்ஜ் செய்வது தொடர்பாக இந்த ஆள் பேசியதற்கு 🔥 விடாதவர்களே இல்லை எனலாம்!
முன்பு AAP கட்சியை கெஜ்ரிவால் தொடங்கிய போது அது NGO,அமெரிக்க முதலாளிகளிடம் பணம் பெற்றுக் கொண்டு காங்கிரஸ் ஆட்சியை அகற்றுவதற்காக தாத்தா அண்ணா ஹசாரே, ஆன்மீக மாமா பாபா ராம்தேவ்,காவல்துறையிலிருந்த கிரண்பேடி மற்றும் சிலரால் ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த போது கழுவிக்கழுவி ஊற்றப்பட்டவர் சென்ற தேர்தலின் போது இந்திய கூட்டணிக்குள் வந்து விழுந்ததும் புனிதராகிவிட்டார்.
வர்க்கப் போராட்டம் இல்லாத வர்க்க அரசியல். இது சித்தாந்தங்கள் முடிவடைந்துவிட்ட காலம். நாங்கள் வலதும் இல்லை, இடதும் இல்லை. தனியார்மய எதிர்ப்பு, உலக வர்த்தக கழக எதிர்ப்பு தேவையில்லை. காரியம் நடப்பதற்கு எது பொருத்தமோ அதைச் செய்வோம்”. இவையெல்லாம் ஆம் ஆத்மியின் அரசியல் கொள்கை பற்றிய நிலைப்பாடுகள்.
இதன் விளைவுகளால் தொழிலதிபர்கள்,கல்வி நிறுவன முதலாளிகள்,பிரபலமான கிரிக்கெட் வீரர் ஹர்பதன்சிங் போன்றவர்களுக்கு ராஜ்யசபை MP பதவிகளை வாரி வழங்கினார் கெஜ்ரிவால்.
இப்போது அந்த பண முதலைகள் மற்றொரு பெரும் தொகைக்கும்,ஏற்கனவேயிருக்கும் சொத்தை பாது காத்துக் கொள்ளவும் பாஜகவிடம் அடைக்கலம் புகுந்துவிட்டனர்.
தமிழகத்தில் கூட பல அதிமுக தலைகள் பாஜகவிடம் நேரடியாக வும்,மறைமுகமாகவும் அடைக்கலம் புகுந்துதான் கிடக்கிறார்கள்.
மாநில அளவில் பல முன்னாள் அதிமுக MP,MLA கள் திமுகவில் புகுந்தும் பாதுகாப்பாக வாழ்கிறார்கள்.
ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் தேர்தலில் வெற்றி பெற முடியாத குதிரையான
*இந்திய கூட்டணி* மீது சவாரி செய்ய யாரும் தயாராக இல்லாத போது பாஜகவின் இந்த ஆள் கடத்தல் விளையாட்டு தொடரவே செய்யும். #👨மோடி அரசாங்கம்


