#ராமாவதாரத்துக்கும் #கிருஷ்ணாவதாரத்துக்கும் #ரசிக்க்க_வேற்றுமைகள்_உண்டு
*ராமன் நவமியில் பகல் வேளையில் அரண்மனையில் அவதாரம் செய்தான்.* *கிருஷ்ணன் அஷ்டமியில் அர்த்த ராத்திரியில் சிறையில் அவதாரம் செய்தான்.*
*எண்களில் ஒன்பதை எப்படிப் பெருக்கினாலும் அதுதன் நிலையில் மாறாது.* *அதைப் போன்றவன் ராமன்.*
*எட்டு என்ற எண், தன் நிலையில் பெருக்கும்போது குறுகிக் கொண்டே வந்து இறுதியில் மாயமாகி விடுகிறது. அதைப்போல தன்னை ஒளித்தும்,* *நிதானம் காட்டி பின்னர் மாயையை விரட்டி தர்மத்தை நிலை நாட்டினான் கிருஷ்ணன்.* *ஆகவேதான்,* *‘பகவத் கீதை’ என்ற உபதேசத்தை யுத்த பூமியில் விஜயனை முன்னிட்டு நமக்கெல்லாம் உபதேசம் செய்தான்.*
*ஒருவருக்கு நால்வராய் வாய்த்தது ராமாவதாரம்.* *நால்வருக்கு ஒருவராய் நின்றது கிருஷ்ணாவதாரம். அதாவது, பிள்ளை இல்லையே என்று வருந்திய தசரதனுக்கு ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னன் என்று நால்வராக வாய்த்தது ராமாவதாரம்.* *வசுதேவர், தேவகி, நந்தகோபர், யசோதை என்கிற நால்வருக்கும் -* *கண்ணன் என்ற ஒருவனே, மகவாய் வாய்த்தது கிருஷ்ணாவதாரம்.*
*ராமாவதாரத்தில் சீதைக்குப் புகழ் அதிகம்.* *சிறையிலிருந்து புகழ் பெற்றாள் சீதை. அதைத் தோற்கடிக்கும் விதமாக பிறக்கும்போதே சிறையில் பிறந்து சாதனை செய்தது கிருஷ்ண சாமர்த்தியம்.*
*தூதுபோய் அனுமன் புகழ் பெற்ற சரிதம் ராமாயணம்.* *அந்த தூதுப் புகழும் தனக்கே என்பதைக் காட்டியது கிருஷ்ணாவதாரம்.*
*எல்லாவற்றையும் விட மிக முக்கியம்,* *இராமன், மனிதன் தெய்வமாகலாம் என்பதன் விளக்கம்.* *கிருஷ்ணன்,* *தெய்வமே மனிதனாக வரலாம் என்பதன் சுருக்கம்.*
*அதனால்தான் ராமனுக்கு விஸ்வரூபம் என்று எதுவும் இல்லை.* *கண்ணனுக்கு விஸ்வரூபம் என்பது சர்வ சாதாரணம்.*
*சூட்சுமமாகப் பார்த்தோமானால் கிருஷ்ணன் என்பது ஒரு சுவையான அனந்த நிலை, உத்சவ உற்சாகம், மன மோகன ஸ்வரூபம்....கிருஷ்ணனுக்குப் பூப்போட்டு வணங்குவது மட்டும் பக்தியில்லை. தன்னையே ஒரு பூவைப் போல லேசாக்கிக் கொள்ளுதலே கிருஷ்ண அனுபவம்....fb share
#🤔 ஆன்மீக சிந்தனைகள் #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #✨கடவுள் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏பெருமாள்


