ShareChat
click to see wallet page
search
பூமியின் குடிகளே, நீங்கள் எல்லாரும் தேவனுக்கு முன்பாகக் கெம்பீரமாய்ப் பாடுங்கள். சங்கீதம் 66:1 அவர் நாமத்தின் மகத்துவத்தைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய துதியின் மகிமையைக் கொண்டாடுங்கள். சங்கீதம் 66:2 தேவனை நோக்கி: உமது கிரியைகளில் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறீர், உமது மகத்துவமான வல்லமையினிமித்தம் உம்முடைய சத்துருக்கள் உமக்கு இச்சகம்பேசி அடங்குவார்கள். சங்கீதம் 66:3 பூமியின்மீதெங்கும் உம்மைப் பணிந்துகொண்டு உம்மைத் துதித்துப் பாடுவார்கள், அவர்கள் உம்முடைய நாமத்தைத் துதித்துப் பாடுவார்கள் என்று சொல்லுங்கள். (சேலா.) சங்கீதம் 66:4 தேவனுடைய செய்கைகளை வந்து பாருங்கள், அவர் மனுபுத்திரரிடத்தில் நடப்பிக்குங் கிரியையில் பயங்கரமானவர். சங்கீதம் 66:5 கடலை உலர்ந்த தரையாக மாற்றினார், ஆற்றைக் கால்நடையாய்க் கடந்தார்கள், அங்கே அவரில் களிகூர்ந்தோம். சங்கீதம் 66:6 அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார், அவருடைய கண்கள் ஜாதிகள்மேல் நோக்கமாயிருக்கிறது, துரோகிகள் தங்களை உயர்த்தாதிருப்பார்களாக. (சேலா.) சங்கீதம் 66:7 ஜனங்களே, நம்முடைய தேவனை ஸ்தோத்திரித்து, அவரைத் துதிக்குஞ்சத்தத்தைக் கேட்கப்பண்ணுங்கள். சங்கீதம் 66:8 அவர் நம்முடைய கால்களைத் தள்ளாடவொட்டாமல், நம்முடைய ஆத்துமாவை உயிரோடே வைக்கிறார். சங்கீதம் 66:9 தேவனே, எங்களைச் சோதித்தீர், வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர். சங்கீதம் 66:10 எங்களை வலையில் அகப்படுத்தி, எங்கள் இடுப்புகளின்மேல் வருத்தமான பாரத்தை ஏற்றினீர். சங்கீதம் 66:11 மனுஷரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகப்பண்ணினீர், தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தோம், செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர். சங்கீதம் 66:12 சர்வாங்க தகனபலிகளோடே உமது ஆலயத்திற்குள் பிரவேசிப்பேன். சங்கீதம் 66:13 என் இக்கட்டில் நான் என் உதடுகளைத் திறந்து, என் வாயினால் சொல்லிய என் பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன். சங்கீதம் 66:14 ஆட்டுக்கடாக்களின் நிணப்புகையுடனே கொழுமையானவைகளை உமக்குத் தகனபலியாக இடுவேன், காளைகளையும் செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன். (சேலா.) சங்கீதம் 66:15 தேவனுக்குப் பயந்தவர்களே, நீங்கள் எல்லாரும் வந்து கேளுங்கள், அவர் என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன். சங்கீதம் 66:16 அவரை நோக்கி என் வாயினால் கூப்பிட்டேன், என் நாவினால் அவர் புகழப்பட்டார். சங்கீதம் 66:17 என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார். சங்கீதம் 66:18 மெய்யாய்த் தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார். சங்கீதம் 66:19 என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. சங்கீதம் 66:20 Shared from Tamil Bible 8.9 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் www.bible2all.com Tamil Bible : https://www.bible2all.com/bible?book=19&chapter=66
✝️இயேசு - ShareChat
Tamil Bible (தமிழ் பைபிள்) - Apps on Google Play
Tamil Bible (தமிழ் பைபிள்) offline loaded with rich features enhancing users