நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் ஈரானுக்குப் பெருமை!
மலேசியாவில் ஈரானிய மாணவி சாதனை மினாப் தியாகிகளுக்குத் தங்கப் பதக்கத்தை அர்ப்பணித்தார்!
மலேசியாவில் நடைபெற்ற 25-வது சர்வதேச இளம் கண்டுபிடிப்பாளர்கள் ஒலிம்பியாட் (MIYIO) போட்டியில், ஈரானைச் சேர்ந்த லெய்லா கேஷாவர்சி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
35 நாடுகளுக்கு இடையிலான கடும் போட்டியில் ஆசிய இளையோர் பிரிவில் இந்த மைல்கல்லை அவர் எட்டினார்.
விருது வழங்கும் மேடையில் லெய்லா ஒரு இளஞ்சிவப்பு நிற பாடசாலைப் பையுடன் தோன்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
சமீபத்தில் மினாப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்த பள்ளி மாணவர்களின் நினைவாகவும், அவர்களுக்கு நீதி கோரியும் அவர் இந்தப் பையை ஏந்தி வந்தார். தனது வெற்றியை அந்த தியாகிகளுக்கு அர்ப்பணித்த லெய்லா, உலக அரங்கில் அமைதிக்கான வலுவான செய்தியைப் பதிவு செய்தார்.
சாதனையையும் தாண்டி, சக மாணவர்களுக்காக அவர் காட்டிய இந்த மனிதநேயம் உலக நாடுகளை நெகிழச் செய்துள்ளது. #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕋யா அல்லாஹ் #இறை அடியான்☝️ #📗குர்ஆன் பொன்மொழிகள் #🤲துஆக்கள்🕋


