காதல் கவிதை நீயடி
........
நான் வாசித்த கவிதை உன்விழிதானடி
காதலில் சுவைத்த முதல்கனி இதழ்தானடி
கிள்ளை மொழியில் பேசி மயக்கியவளே
நினைவுகளில் வாழும் கள்வன் நானடி
காயப்பட்ட மனதுக்கு மருந்தளிக்க வருவாயா
அதீத காதல் உன்மீது கொண்டேனடி
என் கோபத்துக்குச் சொந்தக்காரி நீதானடி
நமக்குள் புரிதல் இல்லாமல் சென்றாயடி
உனைத் தேடி நான் வருவேனடி
காதலில் செய்த சத்தியம் நிறைவேறுமா
பிரிந்த உறவு ஒன்று சேருமா
எனை மன்னிப்பாயா எந்தன் கண்மணியே
எம். அமுதா
#என் காதல் கவிதை


