ShareChat
click to see wallet page
search
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 தொழில் தொடங்க மானியத்துடன் கடன் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேர்முக தேர்வு தூத்துக்குடி ஜூன் 6 தூத்துக்குடியில் ஒரு முனை தீர்வு குழு கூட்டம், நீட்ஸ், மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டங்களுக்கான நேர்முக தேர்வு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சிறு குரு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம்,தூத்துக்குடி மூலம் செயல்படுத்தபடும் ஒரு முனை தீர்வு குழு கூட்டம் மற்றும் நீட்ஸ், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டங்களுக்கான நேர்முக தேர்வு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் புதிய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொடங்குவதற்கான ஒற்றை சாளர இணையதளத்தில் அனுமதி/உரிமங்களுக்காக பதிவு செய்யப்பட்டுள்ள அரசு துறையில் நிலுவையிலுள்ள 23 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அரசு துறைகளுக்கு விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார். நிகழ்வில் நீட்ஸ் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகள் மற்றும் அண்ணல் அம்பேத்கார் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 11 பயனாளிகள் தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் பெறுவதற்காக பங்கேற்றனர். இத்திட்ட பயனாளிகளை தேர்வு செய்வதற்காக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மற்றும் நேர்முக தேர்வு குழு உறுப்பினர்கள் முன்னிலையில் நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் ஸ்வர்ணலதா, முன்னோடி வங்கி மேலாளர், தொழில் நிறுவன பிரதிநிதிகள், வங்கியாளர்கள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள் - ShareChat