#🤱அன்னையர் தின வாழ்த்துக்கள்🥳 அன்னையர் தின வாழ்த்துகள்!
அம்மா..
உடலுக்கு உயிர் தந்து
உலகம் காணச் செய்தவள்
தன் தூக்கம் மறந்து
பிள்ளை தூக்கம் கண்டவள்
பசியிலும் உழைப்பிலும்
பிள்ளையின் உயர்வை
முன்னிறுத்தி
உடலின் எத்தனை வலியிலும்
எல்லா வேலைகளையும்
செய்பவளைப்
புரிந்துகொண்ட பிள்ளைகள்
மட்டுமே
அவளுக்கு உதவிசெய்ய
முன்வருவார்கள்
நீங்கள் படித்து முடித்தபின்
எழுத்தில் மட்டும் அன்பைக்காட்டாமல்
சின்ன சின்ன வேலைகளில்
தாய்க்குத் துணையாக
இருங்கள்
வீட்டைச்சுத்தப்படுத்துதல்,துணிகளைத் துவைத்தல்,கடைக்குச் சென்று சாமான் வாங்கிவருதல் என
ஒவ்வொரு வீட்டுவேலையும்
செய்து கொடுங்கள்
முக்கியமாக அவள் மனம்
புண்படும்படியாகப் பேசாதீர்கள்
தவறே செய்தாலும் இதமாகச்
சுட்டிக்காட்டப் பழகுங்கள்.
மனிதநேயம் தழைப்பதைக்
காண்பீர்கள்.


