*இன்று மக்களிடம் ஒரு தவறான கெட்ட பழக்கம் பரவியுள்ளது.*
*அதாவது நாம் நல்ல வார்த்தைகளைப் பேசினால் நல்லதே நடக்கும், நேர்மறையான எண்ணங்கள் சிந்தனைகள் இருக்க வேண்டும். நாம் என்ன செய்கின்றோமோ அதுதான் நடக்கும் என்கின்றார்கள்.*
*சரி... நான் தெரியாமல்தான் கேட்கின்றேன்...?*
*குழந்தைகளுக்கு உள்ளாடை அணிவிப்பதற்குப் பதிலாக ஒருமுறை பயன்படுத்தும் டயாப்பர் பயன்படுத்துகிறீர்கள்...?*
*அப்படியென்றால்.... அந்த டயாப்பரைத் தூக்கி எறிவது போன்று அந்தக் குழந்தையையும் தூக்கி எறிகிறீர்கள் என்றுதானே பொருள்...?*
*சரி அதையெல்லாம் விடுங்கள்....*
*அந்த டயாப்பரில் என்ன வேதிப்பொருட்கள் இருக்கின்றன? என்கின்ற விடையாமாவது தெரியுமா?*
*ஒரு மண்ணும் தெரியாது.*
*விளம்பரதில் பார்த்தேன். பெரிய பணக்காரர்கள் இதைத்தான் பயன்படுத்துவார்கள். அதனால் வறட்டு கவுரவத்திக்காக நாங்களும் இதைத்தான் எங்கள் குழந்தைகளுக்குப் பயன்படுத்துகின்றோம். அப்புறம் இப்போதெல்லாம் யாருங்க வீட்டில் துணி துவைக்கின்றார்கள்? துணி துவைத்தால் நல்ல குடும்பம் கிடையாது. கவுரவக் குறைச்சல் ஆமாம்...!*
*அப்போதுதானே பார்ப்பவர்கள் எங்களை educated பேமுழி ன்னு நெனச்சு மதிப்பாங்க.?*
*எங்களுடைய பேமுழிக்குன்னு ஒரு கவுரவம் அந்தஸ்து இருக்கிறதா? இல்லையா?*
*ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்.... நோய்க்கும், மரணத்திற்கும் காசு பணம் கவுரவம் அந்தஸ்து எதுவுமே பார்த்து வாராது மகனே....!*
*அடிச்சா ஒரே அடி...! தூக்கி வீசிட்டுப் போயிக்கிட்டே இருக்கும்.*
*காசு பணம் இருக்கிறது என்பதற்காக இன்று குழந்தைகளின் அப்பனும் ஆத்தாளும் என்ன ஆட்டம் ஆடுறாங்க?*
*குழந்தைகளை வெளிநபர்கள் யாருமே பார்க்கவே கூடாது, வெளிநபர்களின் மூச்சுக் காற்று நிழல் குழந்தையின் மீது விழவே கூடாது.*
*அய்யயையோ.....*
*சூரிய ஒளி குழந்தையின்மீது விழக்கூடாது....*
*பூமியில் இந்த மண்ணில் குழந்தையின் கை கால் படவே கூடாது....*
*மழை நீர் பனி குழந்தையின் மீது விழவே கூடாது.*
*அட.... அந்த வீட்டில் இருக்கின்ற கிழடுகள் இருக்கின்றார்கள் பாருங்கள்.... அவர்கள் பெயரன் பெயர்தியை ஏதோ வேற்று உலகத்தில் இருந்து வந்த திருட்டுப் பொருள் போன்று யாருக்குமே தெரியாமல் பாத்துக்கொள்கின்றேன் என்ற பெயரில்.... அய்யய்யோ....*
*இப்படி பொத்திப் பொத்தி வளர்த்து கடைசியில் என்ன நடக்கும் தெரியுமா?*
*இவர்களே குழந்தைகளுக்கு விசத்தைக் கொடுப்பார்கள். அதுவும் தெரிந்தேதான் கொடுப்பார்கள்.*
*எப்படி?*
*கைசீனிக் என்ற பெயரில் ஹார்லிக்ஸ் போர்ன்விட்டா பீடியாசுயர் மால்டோவா சத்துமாவு லொட்டு லொசுக்குன்னு வாங்கிக் கொடுப்பாங்க.*
*சரி... நாளைக்கு அந்தப் பிள்ளைங்க பெரியவர்கள் ஆனதும் எங்கு வாழ்வார்கள்?*
*கண்ணாடிக் கூண்டிற்குள்ளா?*
*அல்லது வேற்று கிரகத்திலா?*
*கடைசியில் இந்த மண்ணில்தானே?*
*இங்கதான் டுவிஸ்ட்டே ஆரம்பம்.*
*குழந்தைகளுக்கு தங்க பஸ்பம் எல்லாம் வாங்கிக் கொடுத்து வளர்த்து கடைசியில் இந்த பூமியில் இந்த மண்ணில் (அது எந்த நாடாகவும் இருக்கட்டும்) இங்கு வாழ விடுகிறீர்கள்...?*
*அந்தக் குழந்தை மண்ணில் விளையாடியிருந்தால்தானே அந்த மண்ணிலுள்ள கிருமிகளை எதிர்க்கும் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகியிருக்கும்?*
*அந்தக் குழந்தையின் உடலிலுள்ள தோலில் சூரிய ஒளி பட்டிருந்தால்தானே உடல் நலமாக வளமாக இருந்திருக்கும்?*
*டேய் சோணை முத்தான்....!?*
*போச்சா....? என்ற கதையாக ஆகிவிட்டபின்....*
*அழுது புலம்பி என்ன பயன்?*
*அடுத்த மக்களின் மூச்சுக்காற்று நிழல் வாசம் படாமல் வளர்த்தபின் அந்த மக்களின் மத்தியில் உங்கள் பிள்ளைகளை வாழவிட்டால்...? அப்போது பிற மனிதர்களின் இருமல் காற்றுக் கிருமிகளை எதிர்கொள்ள உங்களின் குழந்தைகளின் உடலில் எதிர்ப்பு சக்தி இருக்காதே?* #😍குட்டி கதை📜 #💪ஊக்குவிக்கும் கதைகள் #⏱ஒரு நிமிட கதை📜 #உற்சாக பானம்# #👪 cute family members 👪


