அங்காளி
பார்த்து கொள்ளவாள்
பார்த்துக்கொண்டே உள்ளார்
நேர்மை...
எப்போதுமே...
ஒரு வழிப்பாதை.
அதற்கு மாற்று வழிகள் கிடையாது.
மோதியே தான் ஆகணும்...
இவர்கள் ஏன் இப்படி என்பதைவிட...
இவர்கள் இப்படித்தான் என்று நினைத்து விலகி விடுவது நிம்மதி.
நீருக்கு நிறம் இல்லை,
நெருப்புக்கு ஈரம் இல்லை,
கதிரவனுக்கு நிழல் இல்லை,
காற்றுக்கு உருவமில்லை.
ஆக அது இருந்தால் இது இல்லை.
இது இருந்தால் அது இல்லை.
ஒன்றைக் கொடுத்து ஒன்றை எடுத்தான் இறைவன். ஒவ்வொன்றுக்கும் காரணம் வைத்தான். எவர் வாழ்விலும் நிறைவில்லை, எவர் வாழ்விலும் குறைவுமில்லை.
இதைப் புரிந்து கொண்டு அமைதி கொள்ளுங்கள். வாழ்வு ஒரு முறை வாழ்ந்து பாருங்கள். இந்த பிரபஞ்சம் பரந்து விரிந்திருக்கிறது உங்களுக்காக.
பொருளாக இருந்தாலும் நேரமாக இருந்தாலும் வாழ்க்கையாக இருந்தாலும் கையில் கொடுக்கபபட்டதைத் திட்டமிட்டுப் பயன்படுத்தி வளமாக்கி பெருக்கிக் கொள்பவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்.
எந்தத் தடைகளுக்கும் அஞ்சாதீர்கள் அவற்றை வரவேற்று கொண்டாடுங்கள்.
தடைகள்தான் உங்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரும். நெருக்கடியான காலகட்டம்தான் மிகச் சிறந்த உங்களை உங்களுக்கே அடையாளம் காட்டுகின்றன.
ஒவ்வொரு நொடியும் உங்கள் வாழ்க்கையில் வெற்றிக்காகப் போராடுங்கள்.
ஆனால் அந்த வெற்றியில் பிறரின் துன்பம் மட்டும் இருக்கக்கூடாது என்பதில் உறுதியாகச் செயல்படுங்கள்.
பிறரது துன்பத்தில் மகிழ்ச்சிக் கொள்பவர்கள் தங்கள் வாழ்விலும் துன்பம் வரும் என்பதை ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
ஒவ்வொரு முயற்சியும் வெற்றியாக மாறுவதில்லை. ஆனால், ஒவ்வொரு வெற்றியும், முயற்சியில்லாமல் வருவதில்லை.
கொஞ்சம் சிரமம் மேற்கொண்டு, உரித்து எடுத்தால் தான் உட்புறத்தில் இருக்கும் இனிமையான சாறு கிடைக்கும். அது போல வாழ்க்கையில் எத்தனை கடுமையான சோதனைகள் இருந்தாலும், அவற்றை கடும் முயற்சியோடு, அந்த கரடு முரடான பாதையை சலிப்பின்றி கடந்து சென்றால். இனிமையான வாழ்வைச் சுவைக்க முடியும் என்பது தான் கரும்பு உணர்த்தும் தத்துவம்.
மனம் அனுபவப்பட முடியாது..
இதயம் மட்டுமே
அனுபவப்பட முடியும்.
~மகிழா. 💃
செய்த குற்றத்திற்கு பாவம் துரோகம் அடுத்தவரை ஏமாற்றுவது அடுத்தவர் குடும்பம் நாசம் செய்யும் நினைக்கும் போது உன் வம்சம் வேர்ருடன் அழிக்கும் அதற்கு உடைந்தைய இருந்தவர் தலைமுறை இல்லாமல் போகும் பங்காளி சித்தப்பு மாமு நினைவில் வைத்திரு அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் எத்தனையோ பெரிய பெரிய சகாப்தம் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் நீ மட்டும் எம்மாத்திரம் எப்படி வந்தது அப்படியே போகும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது எத்தனையோ கோவிலுக்கு சென்றாலும் தீராது எத்தனை அன்னதானம் செய்தலும் தீராது எத்தனை உதவிகள் செய்தாலும் தீராது எத்தனையோ யாகம் செய்தாலும் ஆலயங்களுக்கு சென்றாலும் தீராது எத்தனை முறை கங்கையில் நீராடினால் தீராது உனது பாவத்திற்கு பரிகாரம் இல்லை நிம்மதியும் மகிழ்ச்சியும் சந்தோஷம் குலம் இல்லாமல் போகும்
#வாழ்க்கை_போராட்டம் என்பது இவ்வளவு தான் ..
முந்தைய விருப்பங்களுக்கு !!
இன்றைய விருப்பங்களுக்கும் !!!
இடையே ??
எதை ஏற்பது ?? எதை விடுவது ?? என்று
உனக்குள் ..
உன்னால் ..
உன்னோடு நிகழும் போராட்டம் தான் ..
உன்னோடு நீ ஒத்துப்போனால் மகிழ்ச்சி / சந்தோஷம் ..
உன்னோடு நீ ஒத்துப்போகாவிட்டால் வருத்தம் / துயரம் ..
அதே
உன்னை உனதாக்கியனோடு என்றும் உன் இருப்பு என்ற மெய்யுணர்ந்து அனுபவிக்க ஆனந்தம் ..
திருச்சிற்றம்பலம்
திருச்சிற்றம்பலம்
தலம்: #திருநள்ளாறு
இறைவன் #தர்ப்பாரண்யேஸ்வரர்
#திருநாவுக்கரசர் (அப்பர்) சுவாமிகள்
அருளிய #தேவாரம்
#பாடல்:
மேகம் பூண்டதோர் மேரு வில் கொண்டு எயில்
சோகம் பூண்டு அழல் சோரத் தொட்டான் அவன்
பாகம் பூண்ட மால் பங்கயத்தானொடு
நாகம் பூண்டு கூத்தாடு நள்ளாறனே.
#விளக்கவுரை:
பங்கயம்=தாமரை; பங்கயத்தான்=தாமரை மலரில் உறையும் பிரமன்; எயில்=கோட்டை; அழல்=நெருப்பு; சோர=பற்ற; தனது பெரிய புராண விளக்கம் புத்தகத்தில் சிவக்கவிமணி திரு சி.கே. சுப்பிரமணியம் அவர்கள் அழல் சோர என்ற தொடருக்கு அழலினால் சோர்வடைந்து அழிய என்று பொருள் கொள்கின்றார். திருநள்ளாறு தலம் சப்த விடங்கத் தலங்களில் ஒன்றாகும். திருநள்ளாறு தலத்தில் பெருமான் ஆடும் நடனம் உன்மத்த நடனம் என்று கருதப் படுகின்றது. மற்ற சப்த விடங்கத் தலங்களில் ஆடும் நடனங்கள் பின்வருமாறு; திருவாரூர்–அஜபா நடனம், திருமறைக்காடு-அன்ன நடனம், நாகைக் காரோணம்-அலை வீசி நடனம், திருவாய்மூர்-கமல பாத நடனம், கோளிலி=பிருங்க நடனம், வண்டு நடனம்; திருக்காறாயில்-குக்குட நடனம், மயில் நடனம்.
#பொழிப்புரை:
திரிபுரத்து அரக்கர்களின் மூன்று பறக்கும் கோட்டைகளில் உள்ளவர்கள் வருத்தம் அடையும் வண்ணம் கோட்டைகளை நெருப்பு பற்றுமாறு, மேகங்கள் தவழும் வண்ணம் உயர்ந்து இருக்கும் மேரு மலையை வில்லாக வளைத்துத் தொட்டவன் சிவபெருமான். அவனது உடலில் ஒரு பாகத்தில் உள்ள திருமால் மற்றும் தாமரை மலரில் அமரும் பிரமன் ஆகிய இருவராலும் வழிபடப்படும் பெருமான், நாகத்தை அணிகலனாகத் தனது உடலில் அணிந்து நடனம் ஆடுபவனாக உள்ளான். அத்தகைய இறைவன் தான் திருநள்ளாறு தலத்தில் உறைகின்றான்.
#நமச்சிவாயம்
_*கவலைகள்*_
_*ஒவ்வொரு நிமிடமும் யாரோ ஒருவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.*_
_நாம் அனைவரும் நமக்கே தெரியாமல் அந்த “வரிசையில்” நின்று கொண்டிருக்கிறோம்._
_*நமக்கு முன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது.*_
_நாம் வரிசையில் , எந்த இடத்தில் பொருத்தப்படுகிறோமோ அந்த இடம் மாறப்போவதில்லை._
நாம் வரிசையின் #பின்புறம் செல்ல முடியாது. நாம் வரிசையிலிருந்து #வெளியேறவும் முடியாது.
நாம் வரிசையைத் #தவிர்க்க முடியாது. எனவே நாம் வரிசையில் காத்திருக்கும் போது நம்முடைய தருணம் வரும் என்று உணர்ந்து வாழுங்கள்
தேவையானவற்றிற்கு முன்னுரிமைகள் செய்யுங்கள்.
பிரியமானவர்களுக்காக நேரம் ஒதுக்குங்கள். நியாயமானவற்றிற்காக குரல் கொடுங்கள்.
உங்கள் முன்னால் எவரையும் பசியில் இருக்க விடாதீர்கள்.
சின்ன சின்ன தருணங்களையும் அழகாக்குங்கள்.
சுற்றியுள்ளவர்களை சிரிக்க வையுங்கள். புன்னகை செய்யுங்கள்.
அன்பை உருவாக்குங்கள். சமாதானம் செய்யுங்கள். நீங்கள் நேசிப்பவர்களிடம் நேசத்தை சொல்லுங்கள்.
#மகிழ்ச்சியாயிருங்கள், #எந்த #கவலையும் #எதையும் #மாற்றப்போவதில்லை... சொன்ன ஓவ்வொரு வார்த்தைகள் உன்னை திரும்ப காண வரும் போது தெரியும்
திருச்சிற்றம்பலம்
மறியொரு கையர் போலும் மாதுமை யுடையர் போலும்
பறிதலைப் பிறவி நீக்கிப் பணிகொள வல்லர் போலும்
செறிவுடை யங்க மாலை சேர்திரு வுருவர் போலும்
எறிபுனற் சடையர் போலும் இன்னம்ப ரீச னாரே.
திருநாவுக்கரசர் பெருமான் அருளிய தேவாரம்- திருமுறை 4,திரு இன்னம்பர்.
திருச்சிற்றம்பலம்
#ரவிசங்கர்_ராஜா_ஆரணி #இனிய #காலை #வணக்கம்
🌹🌹🌹🌹🌹🌹🚩🕉🪷🙏🏼 #🙏🏼ஓம் நமசிவாய #தெய்வீக சிந்தனைகள் #பக்தி கதைகள் #ஆன்மீகம் #சிவபுராணம்



